Saturday, April 10, 2010

ஃபெட்னா 2010

நான் யு.எஸ்ஸிற்கு வந்து இறங்கிய இரண்டாம் நாள் சுதந்திர தினம். அந்த வார இறுதியில் எங்களுக்கு அருகில் இருந்த பெருநகரான டல்லாஸில் (Dallas) சுதந்திர தின பெருவிழா கொண்டாடபட்டது. அந்த பெருவிழாவிற்கு நாங்கள் வாலண்டியர்களாக சென்றதால் எங்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இருந்திருக்கவில்லை. அப்போது தான் அங்கு இருந்த தமிழ் சங்கங்களை பற்றி அறிந்து கொண்டேன். ஆனால் அதில் மெம்பர் ஆவதற்கு கிட்டத்தட்ட 50 டாலர் வரை கட்ட வேண்டிய சூழல். ஒரு மாணவன் என்ற முறையில் அது மிகவும் அதிகம். நான் மாதச் சம்பளம் வாங்குபவனாக இருந்தால், 200 டாலர் கூட கொடுத்து இணைந்திருப்பேன். பின்னர் ஃபெட்னா (FeTNA - Federation of Tamil  sangams of North America) என்ற அமைப்பு வட அமெரிக்காவில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்றினைக்கிறது என்றும், அவர்கள் வருடம் ஒரு முறை பெருவிழா ஒன்றையும் நடத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கடந்த ஆண்டு ஃபெட்னா பெருவிழா நடத்தபட்ட போது பதிவர் பழமைபேசி, அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு வந்தார்.  அதை படிக்க, படிக்க மேலும் ஏக்கம் தான் உண்டானது. சரி இந்த வருடம் எப்படியாவது போவதற்கு காசு தேத்த வேண்டும் என்று பார்த்தேன். அப்படி ஒரு வேளை சென்றால் இந்த முறை தொடர் பதிவு போடும் பெறுப்பை நாம் எடுத்து கொள்ளலாம் என நினைத்தேன். தமிழ்மணம் இந்த வருடம் பதிவர்களுக்கான பட்டறை வேறு நடத்துகிறார்களாம். அதற்கும் எதுனாச்சும் நம்மால் முடிந்த பங்களிப்பை தரலாம் என்று நினைத்திருந்தேன். மேலும் சென்றால் ஏதேனும் வாலண்டியர்  பொறுப்பை எடுத்து கொள்ளலாம் என்றும் இருந்தேன். ஊஹீம் வேலைக்கே ஆகலை. விழா நடப்பது  அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வரும் வார விடுமுறையில் வருகிறது. அதனால் இங்கு டல்லாஸில் இருந்து விழா நடக்கும் கனெக்டிகட்டிற்கு விமான டிக்கெட்டை பார்த்தால் எனக்கு மயக்கம் தான் வந்தது. கிட்டத்தட்ட 500 டாலர். அதில்லாமல் தங்கும் செலவு வேறு. நண்பர்களிடம் கடன் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்களுக்கும் என் நிலையே. பொதுவாக இந்த நீண்ட வார இறுதியில் எங்காவது நண்பர்களுடன் செல்ல முடிவு செய்வோம். அவனவனுக்கு இருக்கும் பணமுடையில் ஒரு வருடமாக எங்குமே போகவில்லை.

பகுதி நேர வேலையே கிடைக்கும் திண்டாட்டமான வேளையில், 500 டாலரை வைத்து இரண்டு மாதம் ஓட்ட வேண்டிய நிலை. அதிலும் எனக்கு வரும் ஆராய்ச்சி உதவி தொகை  வேறு நின்று ஒராண்டு ஆகிவிட்டது. ஹ்ம்ம்ம்... அதனால்  இந்த வருடம் போக வாய்ப்பே இல்லை. இன்னொரு வருடம் போகலாம்...

பின்னர் இணைத்தது: நான் இந்த பதிவை போட வந்த காரணத்தையே முழுதாக மறந்து விட்டேன். சென்ற முறை நடந்த பெருவிழாவில், நன்றாக புலம் பெயர்ந்த தமிழர்களின் காசில் இங்கு வந்து, விழாவையே கொச்சை படுத்தும் நோக்கில் தமிழ் பத்திரிக்கைகள் எழுதின. அதிலும் ஜெயமோகன், அட்வைஸ் மழை பொழிகிறேன் பேர்வழி என்று சரியாக உளறி கொட்டி இருந்தார். இதை தடுக்க தேவை, ஃபெட்னாவிற்கு ஒரு அஃபிஷியல் ப்ளாக்கர் (அ) ப்ளாக்கர்கள். இதன் மூலம் உண்மையான தகவல்களை கொண்டு செல்ல முடியும். அந்த ப்ளாக்கர்களின் முகவரியை ஃபெட்னாவின் தளத்திலேயே இணைக்கலாம். அதன் மூலம் உண்மை தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்கலாம். இதை படிப்பவர்கள் யாராவது ஃபெட்னாவின் உயர் பொறுப்பில் இருப்பர், அவர்கள் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

2 comments:

manjoorraja said...

பழமைபேசியை தொடர்புக்கொண்டால் இந்த விழாவில் உங்களால் பங்கெடுக்க முடியும் என நினைக்கிறேன். தொடர்பு கொள்ளவும்.

பழமைபேசி said...

அன்பா, உங்க தொடர்பு எண்?

Share