Wednesday, January 7, 2009

சத்யம் நிறுவனம் - பன் வித் டிக் அண்ட் ஜேன்



அதிர்ச்சி மேல் அதிரிச்சி என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களில் நான்காவது இடம் வகிக்கும் சத்யம் நிறுவனத்தின் 'திரு'. இராமலிங்க ராஜு ரூ.5000 கோடி ஊழல் செய்தாரா என்று புலனாய்வு பத்திரிகைகள் சில மாதங்களாகவே தலையங்கம் வெளியிட்டு கொண்டு இருந்தன. நேற்று அது வெட்ட வெளிச்சம் ஆகியது. 2001 ஆம் ஆண்டு வரை உலகின் தலை சிறந்த உயர்சக்தி நிறுவனமாக விளங்கிய Enron, மிகச் சாதுரியமாக பொய் கணக்கு காண்பித்து, ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் காண்பித்தது. இப்போது சத்யம் இந்தியாவின் Enron ஆகியிருக்கிறது. வெறும் முன்று சதவிகித லாபம் இருபத்து நான்கு சதவிகிதமாக காட்டப் பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க தனது குடும்ப நிறுவனமான மேதாஸ் இன்பிராவில் பொய் கணக்கு காட்டிய ரூ. 5040 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டார் இராமலிங்க ராஜு. முதலீட்டாளர்களின் தலையீடால் அது தடுக்கப்பட்டது.


இந்த நிலையில் நேற்று நடந்த நிறுவன இயக்குனர்களின் கூட்டத்தில் உண்மையை போட்டு உடைத்தார் ராஜு. வராக் கடன், செலவினங்கள், வட்டி அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட ஏழாயிரத்து நூற்று அறுபது கோடி ரூபாய் துண்டு முதலீட்டாளர்களின் தலை மேல் வீழ்ந்துள்ளது. இந்திய பங்கு வர்த்தகங்களை நிர்வகிக்கும் நிறுவனமான செபி சத்யம் நிறுவனத்தின் பெயரை பங்கு சந்தையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது.


இந்த நிலையில் திரு. இராம் மைனம்படியை சி.இ.ஓவாக நிர்வகிப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் ராஜு. இராம்ஐ பார்க்கும் பொது எனக்கு பன் வித் டிக் அண்ட் ஜேன் திரைப்படத்தில் வரும் ஜிம் கேரி தான் நினைவுக்கு வருகிறார். அந்த திரைப்படத்தில் தனது கம்பெனி திவாலாகும் நேரத்தில், ஜிம் கேரியை கம்பெனியின் முதன்மை அலுவலராக நியமிப்பார் வில்லன். ஜிம் கேரி செய்வது அறியாது 'பெப்பரப்பே' என்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பார். அது போல் தன் இருக்கிறது திரு.மைனம்படியின் நிலைமையும்.


அதே போல் அந்த திரைப்படத்தில் கம்பெனி திவால் ஆனதும் அங்கு வேலை செய்வோர் ஆளுக்கு ஒன்றாக நிறுவனத்தின் சொத்துகளை சூறையாடி செல்வர். யார் கண்டது? அது போல் சத்யமில் நடந்தால் தேசிய தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டு கையை கட்டி கொண்டு நிற்கும்.

Share