Friday, April 3, 2009

போடுங்கம்மா ஓட்டு - ஏதாவது ஒரு சின்னத்தை பார்த்து...

மொக்கை மாயாண்டி மாமாவும் நானும் உக்காந்து எங்க ஊரு டீகடையில ( வேற என்ன McDonalds தானுங்கோ) உக்காந்து கொரிச்சுகினு இருந்தோம். "மாப்பிளை தேர்தல் வருது, நீ ஊருக்கு போகலையான்னு" கேட்டாரு. நானோ "அட நீங்க வேற மாமா, அவன் அவன் இந்த ரிசெஷன் டையத்துல வேலை கிடைக்க மாட்டேங்குது'னு புலம்பிகிட்டு கெடக்கான். இதுல எங்கிட்டு ஊருக்கு போறது"னு நான் என் பாட்டை பாடுனேன்.

உடனே மாமா டென்ஷன் ஆகிட்டாரு. "அது எப்பிடி மாப்பிளை. ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஓட்டு உரிமையை விட்டு கொடுக்க முடியுமா?". எனக்கோ கெட்ட காண்டு. "யோவ்!! நீ இந்த சம்மர் ஊருக்கு போறதுனால என்ன வாருறியா. நான் ஓட்டு போடறதுக்காக இங்க இருந்து இந்தியா போகனுமா. தப்பு லேது மாமு"னு என் பங்குக்கு நானும் டென்ஷன் ஆனேன்.

மாமா சொன்னதை யோசிச்சு பார்த்தா அவரு சொல்லுறது ஒரு வகையில நியாயம் தான்னு தோனுதுங்கோ. ஆனா என்ன பண்றது, திரை கடல் ஓடியும் திரவியம் தேடுனு எங்க ஆயா சொன்னத தட்டாம இங்க ஓடியாந்துட்டேன்.

நம்ம ஊருல தேர்தல் சூடு பிடிச்சிருச்சு போல இருக்குங்கண்ணா. தி.மு.க இன்னைக்கு நாளைக்கோ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்னு சொல்றாங்கோ. கேப்டனை பார்த்து ரெம்ப நாளாச்சு, 'மரியாதை'ல பார்க்கலாம்னு எதிர்பார்த்தா, படத்தை இப்போதைக்கு தடை பண்ணிட்டாங்களாம். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

நான் ஊருல இருந்த பொது திருமங்கலம் இடை தேர்தல் நடந்துச்சு. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. அசால்டா நூறு கோடி பணத்தை (உங்க பணமும், என் பணமும் தான்) போட்டு தி.மு.கவும், அ.தி.மு.கவும் சூதாடுனாங்க. திருமங்கலத்துல நான் இருந்திருக்க கூடாதான்னு கூட யோசிச்சேன். பின்ன என்னங்க, ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம் ரூவா குடுத்த வேணாம்னு சொல்லுவீங்களா. நீங்க வேணாம்னு தான் சொல்லி பாருங்களேன்.

போன பாராளுமன்ற தேர்தல்ல ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டேன். பாவம் அந்த வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கலீங்கோ. இருந்தாலும் ஓட்டுரிமையை விட்டு குடுக்க கூடாதுன்னு போட்டுட்டு வந்தேன். அதே மாதிரி கலைஞர் பண்ற குடும்ப அரசியல் பிடிக்கலைனோ, அம்மா பண்ற 'ராமர் பால' பாலிடிக்ஸ் பிடிக்கலைனோ, கேப்டனோட படம் வரலைனோ, தைலாபுரம் தோட்டத்துகாரங்க தெனமும் வுட்ற அறிக்கை புடிக்கலைனோ, இதர விஷயங்கள் பிடிக்கலைனோ ஓட்டு போடாம இருந்துராதீங்கோ.

யாரையுமே பிடிக்கலையா கொறஞ்ச பட்சம் 'ஒ' சின்னத்துல ஓட்டு போடுங்க. அதாங்க 49 ஒ அதை நிரப்பி குடுங்கோ. இல்லேன்னா உங்க ஓட்டு உறுதியா கள்ள ஓட்டு தேன். ஹ்ம்ம்... என் ஓட்டை எவன் போடப் போறானோ??!!!

ஒரு டைமிங் வீடியோ...

3 comments:

ttpian said...

சொந்தமாய் யோசிக்காதவரை, 21 சீட்டு என்ன? 40 சீட்டும் கிடைக்கும்.....
எப்போது தமிழனுக்கு டெல்லி மதிப்பு கொடுக்கவில்லையோ...இந்த நாடு இருந்தால் என்னா?நாசமாய் போனால் என்ன?

வால்பொண்ணு said...

நல்லா சொன்னீங்க ...

Unknown said...

Excellent Place. Planning to buy a small piece of land there and settle down

Murali

Share