Saturday, November 28, 2009

பழசிராஜா


முதுகலை படிப்பு முடியும் வரை பதிவுலகம் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துடன் தான் இருந்தேன். ஆனால், என்னை எழுதுமாறு தூண்டியது பழசிராஜா படத்திற்கு எழுதப்பட்ட பல நெகட்டிவான விமர்சனங்கள். என்னுடைய சொந்த ஊரான தேனியில் படம் வெளியான முதல் நாளில் திரையரங்களில் இருந்தது என்னவோ மொத்தம் 25 பேர் தான். நான் ’வெயில்’ படம் பார்த்த போது திரையரங்கில் மொத்தம் 5 பேர் தான் இருந்தனர். அதற்கு எவ்வளவோ இது பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

கதை மிகச் சாதாரணமான கதை தான். பழசிராஜா தன் சமஸ்தானத்தை கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியாருடன் போரிட்டு மடிகிறார். பொதுவாக குறுநில மன்னர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டம், சுதந்திர போராட்டத்தில் சேர்க்க இயலாது. அவர்கள் தங்கள் சமஸ்தானத்தை அல்லது ராச்சியத்தை பாதுகாத்து கொள்ளவே அவர்கள் போரிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் என ஆரம்பித்து அத்தனை குறுநில மன்னர்களும் இந்த வகையறாக்களே. பிற்கால சாதி சார்ந்த அரசியலும், ஊடகங்களின் பூதக்கண்ணாடியும் தான் அவர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக உருமாற்றின.

அந்த வகையில் பழசிராஜா ஒரு நேர்மையான படைப்பு என்றே கருதத் தோன்றுகிறது. காரணம், சந்தைப் படுத்தலுக்காக தேசிய அடையாளம் கொடுக்கப் படாமல் என்ன நடந்ததோ, அது அப்படியே கச்சாவாக கொடுக்கப் பட்டுள்ளது. படத்தில் நெருடலான விஷயங்கள் எடிட்டிங்கும், திரைக்கதையும் மட்டுமே. அதை தவிர்த்து டெக்னிக்கலாக, நிறைவான படம். யாரோ சொல்லி இருந்தார்கள், படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு செலவே இல்லை என்று. ஏனென்று பார்த்தால் வெறும் வேட்டி, துண்டிற்கு எவ்வளவு செலவு ஆகி விடப் போகிறது என்று விளக்கம் வேறு.

படத்தில் மிகச் சாதாரணமாய் ஜெகதி வரும் பிரம்பு பல்லக்கை வடிவமைக்கவே கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆனதாம். பொத்தாம் பொதுவாக நாம் நோகாமல் குறை கூறுவதன் பின், பல பேரின் உழைப்பு உள்ளது. ஹாலிவுட் தரத்தில் படங்கள் எடுக்க வேண்டும் எனில் நிறைய நேரமும், காலமும் ஆகும். இதே படத்தை கமல்ஹாசன் எடுத்திருந்தால் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். முத்துராஜிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

சூரியன், நாட்டாமை போன்ற திரைப்படங்களுக்கு பின் சரத்குமாரை எனக்கு மிகவும் பிடித்தது இந்த படத்தில் தான். அவரின் திரைப்பட வாழ்க்கையிலேயே மிகச் சிறப்பான கதாப்பாத்திரம்.

படத்திற்கு சுத்தமாக விளம்பரமே இல்லை. ஒரு வேளை மலையாளத்திலே போட்ட காசை எடுத்து விட்டதால் இங்கே மெனக்கெட் தேவையில்லை என நினைத்திருப்பார்களே என்னவோ??!!

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - 'எ வெட்நஸ்டே' ஒரு ஒப்பீட்டுப் பார்வை -


’எ வெட்னஸ்டே’ திரைப்படத்தைப் பார்த்த போது, இந்திய சினிமாவில் இப்படியும் ஒரு படம் வருகிறதே என்று மிகப் பெருமை அடைந்தேன். அதே திரைப்படத்தை கமலஹாசன் ரீமேக் செய்கிறார் என்ற போது மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், என்னவோ படத்தைப் பார்த்த போது சிறிது ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு வேளை நான் நிறைய எதிர்பார்த்து விட்டேனோ என்று எனக்கு தோன்றியது. ஆனால், இதன் மூலப் படத்தைப் பார்த்த நண்பர்களும் அதேயேத் தான் சொன்னார்கள்.

இந்த திரைப்படத்தின் கதையை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. வலையுலகம் முழுவதும், இந்த திரைப்படத்தின் கதை நிரம்பியுள்ளது. ஒரு படைப்பை குறை செல்வது எளிது. அந்த படைப்பை உருவாக்குபவனுக்கு தான் தெரியும் அதன் வலி. ஆனால் என்ன செய்வது, குறை சொல்லியே பழக்கப் பட்டு விட்டோம். சரி, மேட்டருக்கு வர்றேன்.

கமல் C4 ப்ளாஸ்டிக் வெடிகுண்டுகள் பற்றி சொல்வார். C4 குண்டுகளின் தொழில்நுட்பம், அமெரிக்க இராணுவத்திற்கு மட்டுமே காப்புரிமை செய்யப்பட்ட ஒன்று. அது எக்காலத்திற்கும், அவர்கள் வெளியில் விடக் கூடிய வாய்ப்புகள் குறைவு. அது இந்நேரம் வெளியில் வந்திருந்தால், தினமும் ஒரு மிகப் பெரும் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். மேலும், அது செக்காஸ்லோவேக்கியாவில் செய்யப் பட்டது அல்ல. மாறாக செக் குடியரசுவின் வெடிகுண்டு தொழில்நுட்பத்தின் பெயர் செம்டெக்ஸ். மிகத் திறமையாக அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதும் இரா.முருகன், இதில் எவ்வாறு கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. பேசாமல் ஆர்.டி.எக்ஸோடு நின்றிருக்கலாம்.

படம் முழுவதும் ஒரு வித எமோஷனலான நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கிறது. முக்கியமாக, கமல் தான் எதற்காக குண்டு வைத்தேன், என மோகன்லாலிடம் விவரிக்கும் காட்சி. ‘எ வெட்நஸ்டேவில்’ அது மிக இயல்பாக மும்பை சூழலிற்கு அந்த காட்சியை விவரித்து இருப்பார்கள். ஆனால், என்னவோ தமிழில் கமல் விவரிக்கும் காட்சி சோபையாகத் தான் இருந்தது. தேச பக்தி வாடை தெரியாமல் ஹிந்தியில் தேச பக்தியை சொல்லி இருப்பார்கள். இங்கு சிறிது வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.படத்தின் நீளத்தைக் கூட்டுவதற்காகவே, ஒரு சில காட்சிகளின் நீளத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

தமிழக அரசியல் சூழல், ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் கமிஷனர் மாறுவது போன்ற விஷயங்கள் மிக அழகாக சொல்லப் பட்டு இருக்கின்றன. ’மும்பையில் குண்டு வெடிச்சா நமக்கு என்ன? நாம தான் இங்க கன்யாகுமரியில காலை ஊண்டி நிக்கிறோமே. அங்க குண்டு வெடிச்சா நமக்கு அது வெறும் செய்தி. ஏன்னா அவன் வேற நாட்டுக்காரன். வேற மொழி பேசுறான்’ போன்ற நச்சென்று மனதில் பதியும் வசனங்கள்.

இரசிக்கக் கூடிய பாத்திரத் தேர்வுகள். கணேஷ் வெங்கட்ராம், தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார். அதே போல் அவருடன் வரும் மற்றொரு அதிகாரியாக Dr. பரத் ரெட்டி. ஐ.ஐ.டி ட்ராபவுட்டாக வரும் குட்டி ஆனந்த் (சதிலீலாவதி படத்தில் கமலின் மகனாக வருவாரே). கமல் படம் என்றால் கண்டிப்பாக சந்தானபாரதி இருக்க வேண்டுமா? அதே போல் விருமாண்டி, கில்லி திரைப்படங்களில் வரும் நடிகர் (பேர் தெரியலை மாமே. தெரிஞ்சா சொல்லுங்க), அவர் தீவிரவாதி என்று காட்டியதும், தியேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம். திரையுலகில் பொன் விழா கொண்டாடும் உலக நாயகன், இனியும் இதே போன்ற திரைக்கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Friday, August 21, 2009

Inglourious Bastards [2009] - இரத்தமும், சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம்


இன்னாடா இது? தலைப்புலியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குதேனு, கொஞ்சம் உஷாராகத் தான் தியேட்டருக்கு போனேன். படம் போட்ட பிறகு தான் தெரிந்தது, அதற்கான காரணம். வரலாறு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்தது இந்த படம். முக்கியமாக ஒன்னு. நீங்கள் ஒரு Pulp Fiction அல்லது Reservoir Dogs - ஐ இந்த படத்தில் எதிர் பார்க்க முடியாது. அதனால் தான் என்னவோ, பெரும்பாலான விமர்சகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. இந்த படத்திற்கும், இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை. ஒரு வரலாற்று திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றீர்கள் ஆனால், தயவு செய்து இந்த படம் போட்ட த்யேட்டர் பக்கம் கூட போக வேண்டாம்.

சரி கதை என்ன?
கதை ரெம்ப, ரெம்ப சின்ன கதைங்கோ. மெயின் திரைக்கதை சரடு என்னான்னா, இப்படி வரலாற்றில் நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான். ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டு இருக்கும் ப்ரான்ஸில், யூத அமெரிக்க இராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு, நாஜிக்களை கொன்று குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றனர். அதுவும் சாதாரணமாக கொல்வதல்ல அவர்களின் குறிக்கோள். ஒவ்வொரு நாஜியையும், அவர்களது மேல்தலையை(முடியோடு சேர்ந்த மேல் தலை. புரியாவிடின் கில்பில் வால்யூம் 1ஐப் பார்க்கவும்) கொய்து எடுக்க வேண்டும். அவர்களின் தலைவன் லெஃப்டினண்ட் ஆல்டோ ரைன் (Brad Pitt). அவனுக்கு துணையாக ‘The Bear Jew' என்றழைக்கப்டும் சார்ஜண்ட் டான்னி (Eli Roth) மற்றும் ஒரு எட்டு வீரர்கள். இவர்களுக்கு இடையில் இரத்த வெறி அடங்காது, ப்ரான்ஸிலும் யூதர்களை கொன்று குவிக்கும் கலோனல். ஹான்ஸ் லாண்டா (Christoph Waltz). திரைப்படத்தின் ஆரம்பத்தில், லாண்டாவால் தனது குடும்பமே கொலை செய்யப்பட்டு, அவனை பழி வாங்கத் துடிக்கும் ஷோசன்னா (Melanie Laurent). ஜெர்மனிய நடிகையாகவும், அமெரிக்க உளவாளியாகவும் செயல்படும் ப்ரிட்ஜெட் (Diane Kruger - செம பிகரு மாமே). இப்படி ஒரு சிக்கலான கதாப்பாத்திர அமைப்புகளுக்கிடையே பயணிக்கிறது திரைக்கதை.

படத்தின் டைட்டில் காட்சிகள் 70களில் வெளியான பல இரண்டாம் தர, வெஸ்டர்ன் மற்றும் ஆக்ஸன் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதற்கு வலு சேர்ப்பது போல, படத்தின் ஆரம்ப காட்சி ஒரு ஸ்பாகெட்டி வெஸ்டர்னின் ஆரம்பத்தையே நினைவூட்டுகிறது. முக்கியமாக படத்தின் துவக்க ப்ரேம், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘Unforgiven'ஐ நினைவு படுத்த தவறவில்லை. ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் கதை (இயக்குனர் முத்திரை :D), இரண்டரை மணி நேரமாக நீண்டு இருந்தாலும் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு வேகம். இத்தனைக்கும், படத்தின் நடுவில் சட்டென்று ஒரு ட்ராமா வகைத் திரைப்படத்தைப் பார்க்கிறோமோ என்று தோன்றினாலும், சட்டென்று ஆக்‌ஷன் ட்ராக்கில் மாறி பயணிக்கிறது. 'Valkyrie' என்ற ஒரு Tom Cruise படம் ஒன்றைப் பார்த்தேன். இதுவும் ஹிட்லரை கொல்லும் முயற்சி பற்றிய படம் தான். ஆனாலும் படம் ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அதுக்கெல்லாம் இந்த படம் ஆயிரம் மடங்கு தேவலாம்.

என்ன புதுசு?
என்ன?? இது வரைக்கும் க்வண்டின் டொரண்டினோ படம் பார்த்தில்லையா நீங்க. அனேகமாக பார்க்காம இருந்திருக்க மாட்டீங்க. படத்துல எல்லாமே பழசு தான். ஆனாலும் புதுசு. (இன்னா சொல்ல வர்ற? ஆட்டோ அனுப்பனுமா?). அப்புறம் ஸ்டைல் மாமே. சும்மா சூப்பர் ஸ்டார் மாதிரி நட்சித்திரங்கள், போரடிக்காம குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுறாங்க. உங்களால் வன்முறைக் காட்சிகளை சகிக்க முடியவில்லை எனில் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம். கில் பில் அளவிற்கு இதில் வன்முறை இல்லை எனினும், ஒரு சில காட்சிகள் உவ்வே ரகம் தான். ஒரு காட்சியில் குண்டடி பட்டு கிடக்கும் டயான் க்ருகரை விசாரிப்பதற்காக ப்ராட் பிட், அந்த குண்டடி பட்ட இடத்திலேயே, விரலை வைத்து நோண்டுவார். பத்தாதற்கு இதில் க்ளோசப் வேறு. இந்த காட்சியின் போது த்யேட்டரை விட்டு ஒரு நாலு பேரு எழுந்து போனாங்கோ.

”The Dirty Dozen" என்ற படத்தை பெரும்பாலும் தழுவியே இந்த படத்தை எடுத்து இருக்கிறார் குவெண்டின். பல இரண்டாம் உலகப் போர் திரைப்படங்களையும் நினைவு படுத்த தவறவில்லை. ப்ராட் பிட் நன்றாகவே காமெடியிலும் கலக்கியிருக்கிறார். டென்னஸி ஆக்ஸண்டில் அவர் இத்தாலியன் பேசும் போது அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. ஆனாலும், படத்தில் ப்ராட் பிட்டை நடிப்பில் தூக்கி சாப்பிடுவது படத்தின் வில்லன் கிறிஸ்டோப் வால்ட்ஸ் தான். மனிதர் ஆரம்பத்தில் பார்க்க காமெடியன் போல் இருந்தாலும், படத்தின் ஆரம்ப அத்தியாயத்தில், ப்ரெஞ்சு விவசாயியை விசாரிக்கும் காட்சியில் மெதுவாக முதுகை சில்லிட வைக்கிறார். படத்தின் பிண்ணனி இசை பெரும்பாலும் Ennio Morricone இசையமைத்த வெஸ்டர்ன் படங்களில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் என்னவோ படம் முழுக்க ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தைப் பார்ப்பது போல தோன்றியது.

படத்தில் சில நீளமான காட்சிகள். முக்கியமாக ஒரு பாரில் நடக்கும் உரையாடல் 20 நிமிடத்திற்கு மேல் நீள்கிறது. ஆனால் அதையும் சுவாரசியமாக எடுத்து சொல்ல குவெண்டினால் மட்டுமே முடியும். சீரியசான காட்சிகளில் எல்லாம் சிரிப்பு வருது. முக்கியமாக, Eli Roth ஜெர்மன் இராணுவ அதிகாரியை தனது பேஸ்பால் மட்டையால் அடித்து மூளையைப் பிளக்கும் போது, அரங்கம் ஒரு திகிலோடு சிரித்து கொண்டு தான் இருந்தது. அப்புறம் படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரத்தை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அது செர்ஜண்ட் ஹ்யூகோ(Til Schweiger). நம்ம ஆளு இண்ட்ரொடக்‌ஷன் போட்டப்போ, த்யேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.

பாஸ்டர்ட்கள் உயிரோடு விடும் ஒவ்வொரு நாஜிக்களின் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை இடுவார்கள். அதே போல் படத்தின் இறுதியில் (அய்யய்யோ க்ளைமாக்ஸை சொல்லாத!!) ப்ராட் பிட், கிறிஸ்டோப் வால்ட்ஸ் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை கத்தியால் கிழித்த பின் (கீறல் இல்லை, கிளித்தல். இதிலும் க்ளோசப்) ஆடியன்ஸிடம் “Thhis ees gonna bee my masterpiece" என்று சொல்வதோடு படம் முடியும். இது குவெண்டினின் மாஸ்டர் பீஸ் இல்லாவிடினும் ஒரு திருப்தியான, அலுக்காத மசாலாப் படம் பார்த்த பின் என்ன திருப்தி ஏற்படுமோ, இந்த படத்தைப் பார்த்த பின்னும் உங்களுக்கு தோன்றும். மேலே சொன்னதைப் போல் Inglourious Bastards, இரத்தமும் சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம். இன்னொரு தபா எப்ப பார்க்க போறேன்னு தெரியலை...


Monday, August 17, 2009

பி.பி.சி தமிழோசையும், நானும்


அது என்னமோ தெரியவில்லை. சிறு வயதில் அப்பா ரேடியோ கேக்கும் போது எனக்கு அத்தனை கோபம் வரும். காலையில் ஆரம்பிக்கும் நாராசம் பள்ளி கிளம்பும் வரை தொடர்ந்து, பின்னர் மாலை தொடங்கி இரவு 9:45க்கு முடியும். அம்மா கூட சில சமயங்களில் கடுப்பாவது உண்டு. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வானொலி கேட்பது என்பது அனிச்சை செயலாகிப் போனது. வானொலி இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக பி.பி.சி தமிழோசை. இந்திய நேரப்படி இரவு 9:15 தொடங்கி, 9:45க்கு முடியும். ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் கொடுக்கும் தொகுப்பை, இன்றைய 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் தர முடியாது.

மே 3 1941-இல் தொடங்கிய தமிழோசை, முதலில் வாரம் ஒரு முறை நிகழ்ச்சியாகத் தான் தொடங்க பட்டது. பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என்றாகி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக உருப்பெற்றது (நன்றி: பி.பி.சி தமிழ் இணையதளம்) நினைவு தெரிந்த நாளிலிருந்து, பி.பி.சி தமிழோசை கேட்டு கொண்டிருந்தேன் (கல்லூரி செல்லும் வரை). எத்தனை உபயோகமான சங்கதிகள். பொதுவாக மூன்றாக பிரித்து விடுவார்கள். செய்தி அறிக்கை, செய்தி அரங்கம், மற்றும் சிறப்பு செய்திகள். இவற்றுக்குள் உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் அத்தனையும் அடக்கி விடுவார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் அழகான மங்கள இசை. அனேகமாக காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களுடையதாக இருக்கலாம்.

என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘அறிவியல் ஆயிரம்’. அப்போது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். மரங்களின் வயதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று அவர்கள் விவரித்தது இன்றளவும் பசு மரத்தாணி போல் மனதில் உள்ளது. அது மட்டுமல்லாது இரும்பு பாத்திரங்கள் அதிகம் உபயோகித்தால் உணவில் இரும்பு சத்து கூடும் என்று அவர்கள் சொல்லித் தான் தெரிந்தது. இணையம் என்றால் என்ன என்று தெரியாத, ஆங்கிலத்தில் ஒரு பத்தியை ஒன்பது மணி நேரம் படிக்கும், ஒரு சாதாரண தமிழக கிராமச் சிறுவனுக்கு இதை விட, என்ன ஒரு தகவல் களஞ்சியம் இருக்க முடியும்.

மேலும் ’தகவல் அரங்கம்’ என்று ஒரு நிகழ்ச்சி இருந்ததாகக் கூட நினைவு. இன்று வரை என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘பாட்டொன்று கேட்டேன்’. 75 பாகங்கள் வந்த இந்த நிகழ்ச்சியை தற்செயலாக கேட்க ஆரம்பிக்க, ஒவ்வொரு வாரமும் கேட்க ஆரம்பித்தேன். பத்திரிக்கையாளர் ‘சம்பத்குமார்’ தனது கனீர் குரலில் அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் 10 நிமிடத்திற்காக ஒரு வாரம் முழுவதும் தவம் கிடந்தேன். திரைப்பட வரலாறுகள் மிகவும் சுவாரசியமானவை. திரைப்படங்கள் மூலமாக அன்றைய சமூக நோக்குகள், ரசிக பார்வைகள் அவற்றை அறிந்து கொள்வதில் எனக்கு அலாதிப் பிரியம். அதையும் பாடல்கள் வழியாகத் தெரிந்து கொள்வது, நாயர் கடை டீயில், டபுள் மலாய் போட்டு குடிப்பது போல.

ஆனால் ஏனோ ஒரு கட்டத்திற்கு மேல் என்னாலும் சரி, அப்பாவாலும் சரி, அவ்வளவாக கேட்க முடியவில்லை. முக்கியமாக நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த பின். மற்றுமொரு காரணம் - இலங்கைச் செய்திகள். (இலங்கை நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இது தமிழோசையைப் பற்றிய எனது பொதுப் பார்வை மட்டுமே). காரணம் செய்தி அறிக்கை, செய்தி அரங்கம் மட்டுமல்லாது தனியாக இலங்கை கண்ணோட்டம் என்றும் ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் வாழும் இலங்கை நண்பர் ஒருவர், தங்களுக்கு இது எத்தனை உபயோகமாக இருந்தது என்று அவர் கூறக் கேட்டிருக்கிறேன். இருப்பினும், ஏனோ தமிழோசை அதன் பழைய ஒளி(லி)யை இழந்ததாகவே எனக்குத் தோன்றியது. அப்பாவும் அதேயே தான் தெரிவித்தார்.

தமிழோசை தற்போது இணையத்திலும் இருக்கிறது. இணையம் வந்த பின் சிறப்பு நிகழ்ச்சிகளான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கத் தொடங்கினேன். ஆம். பி.பி.சி இணையத்திலும் இருக்கிறது. தினமும் தமிழோசையைக் கேட்க இங்கு சொடுக்குங்கள். அது மட்டுமல்லாது, ’பாட்டொன்று கேட்டேன்’ நிகழ்ச்சியின் 75 பாகங்களும் உள்ளன. தினமும் இந்திய நேரப்படி நிகழ்ச்சி தொடங்கும் முன், முந்தைய நாள் நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். ‘நினைவில் நின்றவை’ என்னும் பகுதியில் அவர்கள் தொகுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளன. அவற்றில் என்னைக் கவர்ந்ததும், நீண்ட சோகத்தில் ஆழ்த்தியதுமான, சுஜாதா அவர்களின் இறப்புக்கு பின்னர் அவர்கள் தொகுத்த செய்தி. இது பி.பி.சி இணைய தளத்தில் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் யூடியுபில் கிடைத்தது. இதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பி.பி.சி வானொலியில், சிற்றலையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பண்பலை(எப்.எம்) வானொலி யுகத்தில் வெகு சிலரே சிற்றலை கேட்கிறார்கள். சிற்றலையிலும் சிறந்த வானொலிகள் உள்ளன. ஒரு மாறுதலுக்கு கேட்டு பாருங்களேன். மேலும் இலங்கை பதிவர்கள், பி.பி.சி தமிழோசைப் பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டம் இடுங்களேன். தமிழிஸிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டு உங்களின் நண்பர்களுக்கும் தமிழோசைப் பற்றி தெரியப் படுத்துங்களேன்.


Monday, August 10, 2009

Kundun [1997] - மார்டின் ஸ்கார்ஸிசின் மட்டுப்படுத்தப் பட்ட படைப்பு


இந்த திரைப்படத்தைப் பற்றி மிகச் சமீபத்தில் தான் கேள்விப் பட்டேன். பான் நளின் என்பவரின் ‘சம்சாரா’ என்ற திரைப்படத்தைப் பற்றி தகவல் தேடிய போது தான் இந்த படத்தைப் பற்றி தகவல் தெரிந்தது. இயக்குனர் யார் என்று பார்த்தால் மார்டின் ஸ்கார்ஸிஸ். அவரின் சுமாரான படைப்பான ‘நியூயார்க், நியூயார்க்’ கூட டி.வி.டியில் தேட கிடைத்தது. இந்த திரைப்படம் கிடைக்கவில்லை. அப்புறம் இந்த படத்தைப் பற்றி ஆராயும் போது தான், இந்தப் படம் திட்டமிட்டே முடக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்தது. அதை இறுதியில் சொல்கிறேன்.


படத்தைப் பற்றி:

ஒரு வரியில் சொல்லி விடக் கூடிய மிக அழகான திரைக்கதை. தலாய்லாமாவின் சிறு பிராயம் தொடங்கி, அவர் இந்தியா தப்பித்து வரும் வரை தொடரும் திரைக்கதை. அதை மிகத் தெளிவாக படமாக்கியிருக்கிறார் ஸ்கார்ஸிஸ். பொதுவாக வரலாற்றுப் படங்களில் அவ்வளவாக சுவாரசியமான திரைக்கதையை எதிர்ப் பார்க்க முடியாது. ஆனால் இந்த படத்தில் பக்கா ஸ்பீடில் போகிறது திரைக்கதை. படத்தின் திரைக்கதை எழுதிய மெலிஸா மேத்திஸன், தலாய்லாமாவிடம் நேரடியாக பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சீனா, எப்படி திபெத்தை ஆக்குவித்தது. மாவோவின் அரசியல் கொள்கை எப்படி திபெத்தில் இருந்து அமைதியாக மத அடையாளங்களையும், திபெத்தின் கலாசார அடையாளங்களையும் அழிக்க ஆரம்பித்தது என்பதை மிகத் தெளிவாக காட்டி இருந்தனர்.

இந்த படத்தைப் பார்ப்பதற்காக உங்களுக்கு திபெத்தின் வரலாறு தெரிய தேவை இல்லை. மாறாக ஒரு சிறு திபெத்திய வரலாற்றை, தலாய்லாமாவின் கதையின் பிண்ணனியில் படைத்து இருந்தனர். இருப்பினும் பல வரலாற்று நெருடல்கள். உதாரணத்திற்கு திபெத்தின் இந்தியாவுடனான உறவு ஆரம்பத்தில் அத்தனை சீராக இல்லை. வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாய் தலாய்லாமா இந்தியா வந்த பின், இந்தியா சீனாவுடனான உறவு அதல பாதாளத்திற்கு போனது. ஆனால் திரைப்படம் தலாய்லாமா இந்தியா வருவதுடன் நிறைவடைவதால் இதைப் பற்றி சொல்லவும் வாய்ப்புகள் இல்லை.

மிகச் சிறப்பான வசனங்கள்:

தலாய்லாமாவிடம் பேச வரும் சீன இராணுவ அதிகாரி: “நாங்கள் உங்கள் நாட்டை விடுதலை செய்யவே ஆக்ரமித்து உள்ளோம்”, அதற்கு தலாய்லாமா “நீங்கள் என்னை விடுவிக்க தேவை இல்லை, நாங்களே எங்களை விடுவித்து கொள்வோம்” என்று கூறும் இடத்தில் தலாய்லாமாவின் மெளனப் புரட்சியை சாமர்த்தியமாக வெளிப் படுத்துவார் இயக்குனர். மாவோவை சந்திக்க சீனா வரும் தலாய்லாமாவிடம், மாவோ “மதம் ஒரு விஷம் போன்றது” என்று நாசூக்காக தெரிவிக்கும் காட்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறையும் தலாய்லாமா, இனி சீனா திபெத்தை விட்டு விலகாது என்று உணர்கிறார்.

திரைப்பட அரசியல்:

இந்த படம் வெளி வருவதற்கு முன்பே, இதற்கு தடை விதித்தது சீன அரசு. மேலும் திரைப்படத்தின் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸிஸ், எழுத்தாளர் மெலிசா மேத்திஸன், அவரின் கணவர் ஹாரிசன் ஃபோர்டு ஆகிய 25 பேரை சீனாவுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. அந்த தடை இன்னும் நீக்கப் படவில்லை. படத்தை தயாரித்த ‘டச்ஸ்டோன் பிக்சர்ஸி’ன் தாய் நிறுவனமான டிஸ்னி பிக்சர்ஸின் வர்த்தகத்தை சீனாவில் முடக்கி விடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தது சீன அரசு. இதனாலேயே அமெரிக்க வெளீயிட்டில் கூட மிகக் குறைந்த தியேட்டர்களிலே படம் வெளியிடப் பட்டது. ஆஸ்கர் விருதுகளில் கூட எங்கே சீனா நம்மை புறக்கணித்து விடுமோ என்று, ஒரு விருது கூட தரப் படவில்லை. குறைந்த பட்சம் ஒளிப்பதிவிற்காக தந்திருக்கலாம்.

படத்தின் இறுதியில் இந்தியா வரும் தலாய்லாமா, “நான் ஒரு நல்ல பயணத்தை என் மனக் கண்ணில் காணுகிறேன். அதே போல் நல்ல ஒரு திரும்புதல் (திபெத்திற்கு) பயணத்தையும் காணுகிறேன்” என்பார். ஆனால், அந்த திரும்புதல் பயணம் உண்மையாகுமா என்பதிற்கு காலம் தான் பதில் சொல்லும்.

சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதையும்’ கல்கியின் சரித்திர நாவல்களும்




STD - ன்னா வரலாறு தானே என்று திரிந்து கிடந்த எனக்கு சரித்திரத்தில் கொஞ்சமாவது பிடிப்பு ஏற்படுத்தியவை கல்கியின் நாவல்களே. ’பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ’பொன்னியின் செல்வன்’ மூன்றுமே தமிழின் ஆகச் சிறந்த படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், கல்கியின் பாத்திர படைப்புகள் பெரும்பாலும் கொட்டாவி விடவே வைத்தன. கல்கியின் பாத்திரங்கள் ஒன்று ரெம்ப நல்லவர்களாக இருப்பார்கள், அல்லது ’தவசி’ பாசையில் ரெம்ப ரெம்ப கெட்டவர்களாக இருப்பார்கள். ‘பார்த்திபன் கனவு’ என்னைப் பொறுத்த மட்டில் அவரின் மிகச் சிறந்த முழுமையான படைப்பு. அதற்கு பிறகு ‘சிவகாமியின் சபதம்’, அதற்கு அடுத்த வரிசையில் தான் எல்லோராலும் கொண்டாடப் படும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பாத்திரங்களின் அளவுக்கு அதிகமான ரொமாண்டிஸிஸம், என்னை பல சமயங்களில் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இது அனைத்தும் எனது கருத்தே.


சரி சரி மேட்டருக்கு வரேன் மாமே. இப்ப தான் சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யைப் படித்து முடித்தேன். (அவரின் முதலாவது சரித்திர நாவல் ‘இரத்தம் ஒரே நிறம் - முதலாம் சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார்). கதை வழக்கம் போல் சோழப் பேரரசின் காலத்தில் நடக்கும் கதை. ஆனால் கதை நாயகன் நம்ம வசந்த குமாரன். அவனுக்கு குரு போல் இருந்து செயல் படுபவர் கணேச பட்டர். இந்த பேரை எல்லாம் எங்கே கேட்டது போல் இருக்குதா. ஆமாம் பாஸீ. கணேஷ், வசந்த் ஒரு சரித்திர நாவலில். ஷப்பா!! இன்னாமா யோசிச்சு இருக்காருப்பா சுஜாதா. சத்தியமாக மேலே சொன்ன வரிகளை எழுதும் முன் இந்த பாத்திரப் படைப்பை நான் உணரவில்லை.

நம்ம வசந்தகுமாரன் வழக்கம் போல் பெண் பித்தன். சூதாடுபவன். நம்மாளு சிக்கல்ல மாட்டும் போதெல்லாம் நம்ம கணேச பட்டர் தான் காப்பத்துறாரு. கணேச பட்டர் பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே). யவன தேசத்தில் (க்ரீஸ்) இருந்து வரும் ஒரு குதிரை வணிகனிடம், குதிரைகளை வாங்குவதற்காக பேரம் பேசும் வசந்தகுமாரன், அவனை ஒரு பதியிலார் விடுதிக்கு (ஹிஹி... அர்த்தம் புரிஞ்சதா??!!) அழைத்து செல்ல அங்கு மர்மமான முறையில் அவன் இறக்கிறான். அதற்கு பிண்ணனியில் உள்ள சதி என்னவென்று கணேச பட்டர் உதவியுடன் ஆராய அது இராஜ இராஜ சக்கரவர்த்தியை சேர, பாண்டியர்கள் கொலை செய்யும் சதியில் வந்து முடிகிறது. கதையின் முடிவை போட்டு உடைக்க விரும்பவில்லை. அதனால் படித்து தெரிந்து கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.

சரித்திரத்தின்படி பார்த்தால் காந்தளூரில் நிகழ்த்திய யுத்தம் தான் முதலாம் இராஜ இராஜ சோழன் நிகழ்த்திய மிகப் பெரிய துவந்த யுத்தம். கி.பி 994இல் சேரனும், பாண்டியனும் இணைந்து சோழர்களுக்கு எதிராக நடத்திய இந்த யுத்தத்தின் பின்னர் இராஜ இராஜன் மும்முடிச் சோழன் என்னும் புகழ் பெற்றான். காந்தளூர் இன்னும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. அதன் பின்னர் உதகை கோட்டை யுத்தம், அதன் தொடர்ச்சியாக இலங்கை யுத்தம். இப்படி தான் செல்கிறது முதலாம் இராஜ இராஜனின் வரலாறு. வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் புனைவு தானே. இந்த வரலாற்றில் கணேஷ், வசந்த் கதாப் பாத்திரங்களை புகுத்தியது தான் சுஜாதாவின் சாமர்த்தியம்.

நாவலின் ஆரம்பத்திலே சுஜாதா சொல்லி இருக்கிறார். ”கட் அவுட் கதாப்பாத்திரங்களாக அமைக்காமல் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார். உண்மை தான். கல்கியின் கதாப்பாத்திரங்களின் ரொமாண்டிஸிஸம் இங்கு சுத்தமாக இல்லை. கதையின் நாயகன் ஒழுக்க சீலனாக இல்லாமல், சூப்பர் ஹீரோ போல் காட்டாமல் மிகச் சாதாரணமாகக் காட்டி இருந்தார்.சரித்திரப் படி, மிகத் துல்லிய தகவல்களை தர மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். அங்கங்கே சுஜாதா டச். முதல் பாகத்திலேயே மசாலா மேட்டரை ஆரம்பித்திருந்தார் சுஜாதா ( பதியிலார் விடுதி!! இன்னும் புரியலையா??).இருப்பினும் கதையின் வேகத்தில் ஏனோ கொஞ்சம் மந்தம். வழக்கமான கணேஷ், வசந்த் நாவலின் சூடு இல்லை.

‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

Monday, July 27, 2009

யூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும் ஊரு நம்புது

முந்தைய பதிவிற்கு மிக நல்ல வரவேற்பு. நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தினர். பத்தாதிற்கு யூத்புல் விகடன் தனது முகப்பு பக்கத்தில், எனது பதிவை வெளியிட்டுள்ளது. அதற்கான முகவரி இங்கே:


பதிவு எழுத ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நம்மளையும் ஊரு நம்புதுடா சுனா. பானா...

Thursday, July 23, 2009

ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை?


ஒரு அமெரிக்க நண்பருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது, சினிமாவைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் தான் சமீபத்தில் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படத்தைப் பற்றி கூறினார். அது இர்ஃபான் கான் நடித்து 2001ல் வெளியான The Warrior என்னும் திரைப்படம். அதை விட இன்னொரு ஆச்சர்யம், அவர் ‘ஹே ராம்’ படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியது. எப்படி இந்த படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்டேன். அவர் சாதாரணமாக IMDB இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.

IMDB(Internet Movie Data Base) பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். அமேஸான்(Amazon) குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த தளம். என்ன இருக்கிறது இங்கு? முதல் மெளனப்படம் ஆரம்பித்து சென்ற வாரம் வெளியான ஆங்கிலப் படங்கள், உலகப் படங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு நான் நேற்று பார்த்த ‘Public Enemies' படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் நான் அறிய விரும்பினால், இந்த தளத்தில் தேடினால் உங்களுக்கு தகவல் மழை பொழியும். அதன் இயக்குனர் மைக்கேல் மேனில் ஆரம்பித்து படத்தின் புரொடக்‌ஷன் பாய் வரை அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். நிற்க. சரி யார் இந்த தகவல்களை சேர்க்கின்றனர். மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவு தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.

மற்ற சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்த படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் இணைய தள முகவரி தரலாம், அல்லது படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியான இணைய இதழ்களின் லிங்குகளைத் தரலாம். பல ஹிந்தி படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளடங்கியுள்ளன. பிரபல ஹிந்தி பட நிறுவனங்களான ஈரோஸ், யு.டி.வி, யாஷ்ராஜ் பிக்சர்ஸ், இந்த இணையதளத்தின் முக்கியத்துவம் அறிந்து தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்கின்றன.

சரி. இதற்கும் தமிழ் சினிமா உலக ரசிகர்களை சென்றடைவதற்கும் என்ன சம்பந்தம்? இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா? பரவாயில்லை. டி.வி.டி வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. குறைந்த பட்சம், டாரண்டுகளின் மூலம் டி.வி.டி ரிப்புகளாவது தரவிறக்கப் படுவதற்கு படத்தின் ரேட்டிங்குகள் உபயோகப் படுகின்றன.

கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமான ’சுப்ரமணியாபுரம்’ பற்றிய தகவல்களை இந்த தளத்தில் தேடினால் காணவில்லை. இந்த படத்தைப் பற்றிய தகவல்களை தரவேற்ற முடிந்த மட்டும் ரசிகர்களாகிய நாம் தாம் முயல வேண்டும். தமிழின் மிகப் பெரிய திரைப்பட நிறுவனங்கள், தங்கள் படங்களை இந்த தளம் மூலம் சந்தைப் படுத்தலாம். ’டாக்ஸி ட்ரைவர்’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸ், ’இண்டெர்னல் அஃபயர்ஸ்’ என்ற ஹாங்காங் திரைப்ப்டத்தை ரீமேக் செய்து தான் ‘ தி டிபார்டட்’ படத்தை இயக்கினார். இவர்களுக்கு இந்த படத்தைப் பற்றி தெரிய வந்தது IMDB மற்றும் ஆசிய தயாரிப்பார்களின் சந்தைப் படுத்தும் முறைகள்.

தற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ‘ஒல்டு பாய்’ என்ற கொரிய திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்யப் போகிறார். இந்த படங்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தது எவ்வாறு? இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா? உதாரணத்திற்கு ‘இராம்’ ஒரு மிகச் சிறந்த த்ரில்லர். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் பட்டால் எவ்வாறு இருக்கும். இது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சமன்பாட்டைக் கலைத்த ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றவை உலக இரசிகர்களை சென்றடைவது எப்போது?

இன்றளவும் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்திய சினிமாவைப் பற்றி கேட்டீர்களனால், ”உங்கள் திரைப்படங்கள் மிக அழகாக உள்ளன. பாடல்கள், இசை அற்புதம். அப்புறம் ஏன் உங்களது கதாநாயகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா, பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள்? அப்புறம் ஏன் உங்கள் படங்கள் ஏன் மிக நீளமாக உள்ளன” என்று கேட்கிறார். அவர்கள் கொண்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு தான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அமெரிக்காவில் குவித்த வசூல் மழை.

மணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது? நான் இறுதியாக சொல்ல வருவது ஒன்று தான். 75 ஆண்டுகள் நிறைவடைந்த நம் தமிழ் படவுலகின் பெருமையை, உலக இரசிகர்களுக்கு சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். IMDB போன்ற இணைய தளங்களில் நமது தமிழ் திரைப்படங்களைப் பற்றி பதிவு செய்வோம்.

பி.கு: இங்கு பதிவுலகில் நிறைய இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த தகவல்களை தமிழ்த் தயாரிப்பாளர்கள் வசம் எடுத்துச் சொல்வீர்களனால் அதுவே இந்த பதிவின் வெற்றியாகக் கருதுவேன்.

Wednesday, July 22, 2009

ஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி யோசிங்க

முதன் முதலில் அந்த வீடியோவைப் பார்த்த போது, என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது. உங்களுக்கும் அது தான் தோன்றும். உலகின் பல்வேறு இடங்களில் நம்ம ‘சாம் ஆண்டர்சன்’ ரேஞ்சுக்கு ஒருவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார். நொடிக்கு நொடி, உலகின் பல்வேறு இடங்களுக்கு காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். யூடியுப் வந்த புதிதில் இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லாம். அந்த அளவு இணையப் பிரபலம் ஆகி விட்டிருந்தார் நமது மோசமான டான்ஸர், மேட் ஹார்டிங் (Matt Harding).

18 வயதில் எல்லோரும் போல நம்ம மேட்டுக்கு கல்லூரி செல்ல பிடிக்கவில்லை. ஒரு வீடியோ கேம் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து, பின்னர் ஒரு வீடியோ கேம் பத்திரிக்கையில் எடிட்டராக இணைந்தார். கிடார் ஹீரோ போன்ற பிரபலமான கேம்களை வடிவமைத்த ஆக்டிவிஷன் மேட்டை தங்களது நிறுவனத்தில் கேம் டெவலப்பராக இணைத்துக் கொண்டது. தனது நண்பர்கள் கல்லூரி முடித்து வேலை தேடி கொண்டிருந்த சமயம், மேட் ஆண்டுக்கு 6 இலக்க அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். ரெம்ப சீக்கிரமா எல்லாவற்றையும் பார்த்த மேட்டுக்கு வாழ்க்கை போரடித்து விட்டது. தீடீரென்று ஏதோ முடிவெடுத்து தான் பணிபுரிந்த வேலையை விட்டு கிளம்பி விட்டார்.

அவருடன் பணி புரிந்த நண்பர்கள், ஒரு நாள் ‘நாளை ஆஸ்திரேலியா போகிறோம், வருகிறாயா’ என்று அழைக்க, அவர்களுடன் கிளம்பியிருக்கிறார். பயணத்தின் போது ஒரு வரலாற்று சின்னம் எதிரில் வழக்கமாக டூரிஸ்ட்கள் போஸ் கொடுப்பது போல் கொடுக்க, அவரத நண்பர் கடுப்பாகி இருக்கிறார். ”ஏன் எல்லாரையும் போல் போஸ் கொடுக்கிறாய், அது தான் நீ மோசமாக ஆடுவாயே, அது போல ஆடு” என்று சொல்லியிருக்கிறார். அப்போது மேட்டுக்கு தெரியவில்லை, தான் ஆடும் மோசமான ஆட்டம் தன் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடும் என்று.

தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், அதே போல் மோசமாக டான்ஸ் ஆடி அதையெல்லாம் தொகுத்து ஒரு வீடியோவாக யூடியுபில் போட, ஒரே இரவில் இண்டெர்னெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார் மேட். தனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அஞ்சல்கள் வந்ததாக சொல்லும் மேட், ஒவ்வொன்றிலும் மக்கள் தங்கள் ஊருக்கு வருகை தருமாறு மேட்டிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். வேலையும் இல்லாமல், காசும் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்த மேட்டுக்கு Stride என்னும் சூயிங் கம் கம்பெனி கை கொடுத்தது. பிறகு என்ன, தனது பேக்கை மாட்டி கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்தார் மேட்.

தான் சென்ற இடங்களிலே தனக்கு மிகவும் பிடித்த இடமாக நியூ கினியை (New Guinea) குறிப்பிடுகிறார் மேட். அங்குள்ள பழங்குடி மக்களுடன் அவர் ஆடிய நடனத்தை தன்னால் மறக்க முடியாது என்று சொல்கிறார். சென்ற ஆண்டு அவர் சுற்றிய நாடுகளின் தொகுப்பு அடங்கிய வீடியோ இதோ:
இன்னும் வேற வேற இடங்களுக்கு சென்று இதே போல் ‘டான்ஸ்’ ஆட மேட்டை வாழ்த்துவோம்.



Thursday, July 2, 2009

In Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலியும்


ஃப்ரான்ஸ் காப்காவின் இரு சிறந்த சிறுகதைகளில் ஒன்று, In the Penal Colony. ஒரு கொலை இயந்திரம் பற்றி, மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக விவரிக்கப் பட்ட சிறுகதை. 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இருத்தலியல் (Existentialism) படைப்பாக இந்த சிறுகதை அறியப் படுகிறது. என்னவோ தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்க்கும் போது, இந்த சிறுகதை என் நினைவுக்கு வரத் தவறவில்லை.

லண்டனில் வசிக்கும் இரு ஐரிஷ் அடியாட்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தவறு செய்ய நேரிட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பெல்ஜியத்தில் உள்ள புருஷிற்கு(Bruges) தங்களை வேலைக்கு அமர்த்தியவரால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவனுக்கு அங்கு வேலை காத்திருக்கிறது. இவர்கள் இருவரும் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான ப்ரச்சனைகளும், அவர்களில் ஒருவன் தான் செய்த தவறினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயல்வதும் தான், இந்த திரைப்படத்தின் கதை. டார்க் ஹீயுமர் என்று ஒரு வகை உண்டு. அதை மிகச் சிறப்பாக இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

காலின் ஃபெரல் (Collin Ferrel) Phone Booth, Minority Report, Alexander போன்ற படங்களில் நடித்தவர். ப்ரெண்டன் க்ளீஸன் (Brendon Gleeson) Braveheart, Kingdom Of Heaven, Harry Potter திரைப்படங்களில் நடித்தவர். இவர்கள் இருவருமே அயர்லாந்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் என்னவோ, ஐரிஷ் அடியாட்களாகவே பொருந்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்துபவராக ரால்ஃப் பியன்னஸ் (Ralph Fiennes), The English Patient, The Constant Gardner மற்றும் The Reader போன்ற படங்களில் நடித்தவர். மூவரும் இப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, கதாப்பாத்திர அமைப்புகள். தயாரிப்பு மேற்பார்வையாளர் போர்வையில் உலவும் போதை மருந்து விற்பவள், இவளுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளை கொள்ளையடிக்கும் அவளின் முன்னாள் காதலன், கர்ப்பமாக இருக்கும் ஹோட்டல் வரவேற்பறை பெண், நிறவெறி பிடித்த குள்ள அமெரிக்க நடிகர் என்று வித்தியாசமான கதாபாத்திர அமைப்புகள். புரூஷ், ஐரோப்பிய நகரங்களிலே மிகவும் பழமையான நகரம், அதை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் Eigil Bryld.

முழுதாக கதையை சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், இந்த பகுதியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இது தான் இந்த படத்தின் ஆதாரம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் எதற்காக புருஷ் வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. ஒரு பாதிரியாரை கொல்லுகையில் காலின் ஃபெரல், ஒரு சிறுவனை தவறுதலாக கொலை செய்து விடுகிறார். அதனால் அவர் கொள்ளும் குற்ற உணர்வும், தன் உயிரை மாய்த்து கொள்ள துணிவதும், இந்த உலகில் தான் ஏன் இருக்க வேண்டும் என்று தனக்குள விவாதிப்பதும் ஒரு சிறந்த இலக்கிய படைப்பை வாசிப்பது போன்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்த தவறாது. இதனால் தான் இந்த திரைப்படத்தை ப்ரான்ஸ் காஃப்காவின் படைப்போடு ஒப்பிடுகிறேன்.

படத்தின் இயக்குநர் மார்டின் மெக்டோனா (Martin McDonagh) இந்த படத்திற்காக, சிறந்த திரைக்கதை பிரிவில், ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘மில்க்’ தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனால், காலின் ஃபெரல் இந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இந்த படத்தைப் பார்த்த பின் உங்களுக்கு ஒரு முறையாவது புருஷிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாகத் தோன்றும். இந்த படத்தின் டயலாக்குகள் சோகமான தருணங்களிலும் உங்களை சிரிக்க வைக்கத் தவறாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

Overweight Man: Been to the top of the tower?
Ray:(Collin Ferrel) Yeah... yeah, it's rubbish.
Overweight Man: It is? The guide book says it's a must see.
Ray: Well you lot ain't going up there.
Overweight Man: Pardon me? Why?
Ray: I mean, it's all winding stairs. I'm not being funny.
Overweight Man: What exactly are you trying to say?
Ray: What exactly am I trying to say? You's a bunch of fuckin' elephants.
[overweight man attempts to chase Ray around but quickly grows tired]
Ray: Come on, leave it fatty!
[the overweight women calm down the overweight man]
Overweight Woman #2: [to Ray] You know you're just the rudest man. The rudest man!
Ken:(Brendon Gleeson) [coming back from the tower] What's all that about?
[Ray shrugs]
Ken: They're not going up there.
[to overweight family]
Ken: Hey, guys. I wouldn't go up there. It's really narrow.
Overweight Woman #2: Screw you, motherfucker!
Ken: [to Ray] What was that about?


இண்டிபெண்டண்ட் வகைத் திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் In Bruges. Guy Ritchie'ன் Lock, Stock and Two Smoking Barrels படத்தை ரசித்தீர்களானால் இந்த படம் உங்களுக்கு ஒரு திரைக் காவியமாகத் தோன்றும்.
இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக:


நண்பர்களே, நண்பிகளே. பதிவைப் படிச்சுட்டு அப்படியே போயிராதீங்க.
தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10ன்னு உங்களுக்கு எது இலகுவா இருக்கோ,
அதுல ஓட்டு போடுங்க. மறக்காம பின்னூட்டம் போடுங்க. அடுத்த பதிவு எழுத
என்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு உபயோகப்படும். நன்றி.

Wednesday, July 1, 2009

திரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்


அது 2001ஆம் ஆண்டு.உயிரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வக் கோளாறில் அலைந்து கொண்டிருந்த +1 மாணவன் நான். இணையம் எல்லாம் என் ஊரில் அந்த அளவுக்கு வரலை. பேரு தான் மாவட்டத் தலைநகரம் (தேனி). என்னோட ஆ.கோவிற்கு தீனிப் போட்டது மாவட்டத் தலைமை நூலகம். அதுக்கு கூட, நான் இருந்த பழனிசெட்டிபட்டியிலிருந்து 4 கீ.மி சைக்கிள் மிதிச்சு போகனும். கலைக்கதிர், நேஷனல் ஜியாக்ரபிக், ந்யூ சயிண்டிஸ்ட் எல்லாம் என்னோட பயோடெக்னாலஜி ஆர்வ அரிப்புக்கு தீனி போட்டன. அப்போது தான் குமுதம் இதழில் ஒரு தொடர் வந்தது. யாரோ நம்மாழ்வார் என்பவர் எழுதியிருந்தார். நம் நாட்டில் இனிமேல் ஏன் பருவ மழை பெய்யாது, என்பதை அவர் விவரித்து எழுதியிருந்த போது, எனக்கு ஏதோ திகில் கதை படித்த உணர்வு. பத்தாதிற்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருந்தார்.

என்னடா இது தேனிக்காரனுக்கு வந்த சோதனை, என்று அவர் தொடர் முழுமையும் படிக்க ஆரம்பித்தேன். ஏன் நமது நாட்டில் இன்னொரு பசுமை புரட்சி வரவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை விவரித்து இருந்தார். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதும், பசுமைப் புரட்சி கொண்டு வந்த உரக்கலப்பு விவசாயத்தில் நம்பிக்கை இழந்து, இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபாடு கொண்டதையும் வேளாண் பட்டதாரியான என் தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டேன். அதற்காக தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை உதறி விட்டு, இயற்கை வழி விவசாயத்திற்கு என தனியொரு அமைப்பான ‘களக்காட்டி’ல் இணைந்தார்.

இது வரை பல என்.ஜீ.ஓ அமைப்புகளை நிறுவியுள்ளார். மேலும் சமீபத்தில் சுவாமி ‘ஜக்கி வாசுதேவுடன்’ இணைந்து ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதிலும் துணை புரிந்து இருக்கிறார். ’பஞ்சகவ்யம்’ - பசுவின் படைப்புகளான பால், தயிர், மோர், சானம், கோமியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அருமையான உரம். பஞ்சகவ்யத்தின் உபயோகத்தை தான் செல்லும் விவசாயக் கூட்டங்களில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார் திரு.நம்மாழ்வார். இவர் கூறிய படி பஞ்சகவ்யத்தை எனது மாமா இன்று வரை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயரிட்டு மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறார். இதில் மேலும் ஒரு அழகு என்னவென்றால், பஞ்சகவ்யத்தை தொடர்ந்து பயன் படுத்தியதால் அவரின் நிலத்திற்கு இரசாயண கலப்பு உரம் உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.

மத்தியில் உள்ள வேளாண் அமைச்சர்கள், பூச்சி மருந்து நிறுவனங்களின் நைச்சிய பேச்சிலும், பணத்திலும் நம்பி, இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்று பிதற்றி வருகின்றனர். இன்னொரு பசுமைப் புரட்சி வந்தால் விவசாயியின் விளைச்சல் பணம் பூச்சி மருந்து வாங்கவே பத்தாது. விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு வீட்டு மனைகள் உருவெடுக்கும் இந்த நிலையில், அரசு இவரைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளை பயன் படுத்தி குறைந்த பட்சம் இயற்கை உரங்களின் மகத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கலாம். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் கால் பதிந்து இருக்க, சிறு விவசாயியின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. நம்மாழ்வரைப் போன்றவர்கள் தான் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

இயற்கையைப் பற்றியும், நாம் இப்போது இயற்கையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளார்:

இந்த வீடியோவைப் பதிவேற்றிய நண்பர் தீனதயாளன் சிவத்திற்கும், புகைப்படம் தந்து உதவிய நண்பர் கடற்கரய் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடற்கரய் அவர்கள் நம்மாழ்வரிடம் ஒரு வருடம் முன்பு ’தீராநதி’க்காக எடுத்த பேட்டிக்கு இங்கே செல்லவும்.

நான் நான்கு வருடம் திருச்சியில் படித்தாலும், இவர் திருவானைக்காவலில் தான் இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இன்றளவும் நான் சந்தித்து
உரையாட விரும்பும் மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் திரு.நம்மாழ்வார்.

Thursday, June 25, 2009

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2 - டிபிகல் தெலுங்கு படம் வாத்யாரே!!



தங்கத் தலைவி மேகன் ஃபாக்ஸ் வாழ்க. இவண் - ஆர்லிங்கபுரம்(Arlington) ரசிகர் மன்றம்.


இந்த படத்தோட முதல் பாகத்துல ஆத்தா ‘மேகன் ஃபாக்ஸ்’ ஒரு காட்சியில காரோட பானட்டைத் தூக்கி ரிப்பேர் பாக்குறப்ப, அப்படி ஒரு ஒயிலா சாய்ஞ்சு போஸ் குடுக்குறதைப் பார்த்து, தியேட்டரே பெருமூச்சு விட்டதுன்னு நம்ம நண்பர் ஒருத்தர் சொன்னாரு. அதே மாதிரி, இந்த படத்துலயும் தலைவி அறிமுகம் ஆகுறப்போ, அதே பெருமூச்சு. சும்மாவா, தலைவி தானே இப்போதைக்கு உலகின் செக்ஸியான பெண். சரி, மேகன் ஃபாக்ஸை தூக்கிட்டு மிச்ச படத்தை பார்த்தோம்னா, படம் செம மொக்கை சார்.

ஆக்‌ஷன் படம் பார்க்கலாம்னு போனா, கெட்ட மசாலா வாசனையோட தியேட்டரை விட்டு வெளிய வந்தோம். காம(நெ)டி, ஆக்‌ஷன் (அம்புட்டும் சி.ஜி), மதர் செண்டிமெண்ட், ஃபாதர் செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட், பத்தாதுக்கு ரோபோ செண்டிமெண்ட் வேற. இப்பிடி ஒரு தெலுங்கு (தெலுங்கு அன்பர்கள் மன்னிக்க) படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அண்ணன் ‘மைக்கேல் பே’ வாணலியில கிண்ட, அது மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாத கோந்து அல்வா மாதிரி வந்துருக்கு.

படத்தோட முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு

ஆட்டோபாட் (Autobot), டிஸப்டிகான் (Decepticons) என்று இரு ரோபோ குழுக்கள். ஆட்டோபாட்ஸ் நல்ல ரோபோக்களின் குழு, டிஸப்டிகான்கள் எதிர் பதம்.ஆட்டோபாட்கள் சைபர்ட்ரான் (Cybertron) என்ற கிரகத்தில் இருந்து வந்தவை. ஆட்டோபாட்களின் தலைமை ரோபோ ஆப்டிமஸ் ப்ரைம் (Optimus Prime), அதே போல் டிஸப்டிகானின் தலை மெகாட்ரான் (Megatron). 'All Spark' என்ற சக்தி தரும் ஒரு கருவியை ஆட்டோபாட்களிடம் இருந்து பெறும் யுத்தத்தில் டிஸப்டிகான்கள் சைபர்ட்ரானை அழித்து விடுகின்றன. All Spark - உடன் பூமிக்கு வரும் ஆட்டோபாட்களை துரத்தும் மெகாட்ரான், பசிஃபிக் கடலில் உறைந்து விடுகிறது. அது உறைவதற்கு முன் ஆல் ஸ்பார்க் இருக்கும் இடத்தை ஒரு கப்பல் மாலுமியின் கண்ணாடியில் பதிந்து, அதற்கான சிக்னல்களை மற்ற டிஸப்டிகான்களுக்கு அனுப்பி விடுகிறது.

2007 - க்கு திரும்பும் கதையில், அந்த கப்பல் மாலுமியின் பேரனான சாம் (ஷியா லெபோஃப் - Shia LaBeouf) தனது தாத்தாவின் கண்ணாடியை e-bayல் ஏலம் விடுகிறான். இதை அறியும் ஆட்டோபாட்களில் ஒன்றான் பம்பில் பி (Bumble Bee) 1974 செவர்லே கமேரோ காராக உருவெடுத்து அவன் இல்லத்திற்கு வருகிறது. இதை அடுத்து நடக்கும் களேபரங்களும், ஆப்டிமஸ் ப்ரைமுக்கும், உயிர்த்தெழும் மெகாட்ரானுக்கும் இடையில் நடக்கும் யுத்தமும் தான் படம். ஒரு வரியில் சொல்லி விட முடியாத கதை இது. காராணம் - பல கதாப்பாத்திரங்கள். ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் கார்ட்டூன்களை சிறு வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் முதல் பாகம் எனக்கு பிடித்திருந்தது. இருப்பினும் இது ஒன்றும் மிகச் சிறந்த படம் அல்ல.

இப்போ இரண்டாம் பாகம்

கி.பி.17,000 ஆம் ஆண்டில் தொடங்கும் கதை, அண்டம் முழுவதும் உள்ள ப்ரைம்கள் (ஆப்டிமஸ் ப்ரைமின் முன்னோர்கள்) நட்சத்திரங்களின் சக்தியைக் கொண்டு தங்களின் வாழ்வாதரமான ஆல் ஸ்பார்க்கை, சன் ஹார்வஸ்டர் (Sun Harvester) என்ற இயந்திரம் மூலம் உருவாக்குகின்றன. அவற்றில் ஒரு கோட்டிக்கார ப்ரைம், மற்ற ப்ரைம்களின் ஒப்பந்தத்தை மீறி பூமியில் ஒரு சன் ஹார்வஸ்டரை நிறுவுகிறது. இதை அறிந்த மற்ற ப்ரைம்கள், அந்த துரோகி ப்ரைமுடன் பூமியில் போர் புரிகின்றன. துரோகி ப்ரைமை எதிர் கொள்ள முடியாத நல்ல ப்ரைம்கள், சன் ஹார்வஸ்ட்ரை இயக்கும் மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை (Matrix of Leadership) தங்கள் உயிரை தியாகம் செய்து, தங்கள்து உடல்களுக்கு மத்தியில் புதைத்து கொள்கின்றன. அந்த துரோகி ப்ரைமின் பெயர் தான் ‘ஃபாலன்’ (Fallen). அது பூமியின் மேல் பழி வாங்க துடிக்கும் கதை தான் Transformers 2: Revenge of the Fallen என்னும் இந்த படத்தின் ஆதாரம்.

இனி முதல் பாகம் முடிந்து சரியாக இரண்டு வருடம் கழித்து ஆரம்பிக்கும் கதை. உலகில் மிச்ச சொச்சம் இருக்கும் டிஸப்டிகான்களை அழிப்பதற்காக, ஆட்டோபாட்கள் உலக இராணுவங்களுடன் கை கோர்த்து நெஸ்ட் (NEST) என்ற அணியை உருவாக்குகின்றன. டெமோலிஷர் என்ற டிஸப்டிகான் சாகும் தருவாயில் ‘ஃபாலன்’ நிச்சயமாக பூமியை பழிவாங்கும் என்று எச்சரித்து விட்டு இறக்கிறது. தற்போது பள்ளிக் கல்வி முடிந்து தனது காதலி (ஆத்தா மேகன் ஃபாக்ஸ்) மற்றும் பம்பில் பியை விட்டு கல்லூரி செல்லும் சாம், ஆல் ஸ்பார்கின் ஒரு பகுதியை பார்க்க நேரிடுகிறான். இதனால் ஆல் ஸ்பார்க்கின் அத்தனை தகவல்களும், சன் ஹார்வஸ்டரின் இருப்பிடமும் சாமின் மூளையில் பதிவிறக்கம் ஆகின்றன.

இதை அறிந்து கொள்ளும் ஃபாலன், ஆழ் கடலில் கடும் பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ள மெகாட்ரானை திரும்ப உயிர்ப்பித்து, சாமின் மூளையில் இருக்கும் சன் ஹார்வஸ்டரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கொண்டு வருமாறு உத்தரவிடுகிறது. சாமைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் விடுகிறது ஆப்டிமஸ் ப்ரைம் (ரோபோ செண்டிமெண்ட் பாஸ்). தன்னை துரத்தும் டிஸப்டிகான்களிடம் இருந்து சாம் தப்பினானா? சன் ஹார்வஸ்டர் எங்கே உள்ளது? மேட்ரிக்ஸ் ஆஃப் லீடர்ஸிப்பை சாம் கண்டுபிடித்தானா? ஃபாலன் மற்றும் மற்ற டிஸப்டிகான்களுக்கு என்ன ஆச்சுன்றதெல்லாம் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்கப்பு. ஹாஹாஹா (நம்பியார் ஸ்டைல்) யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.

என்ன புதுசு

புதுசா? ஒன்னும் இல்லை. ஒன்னுமே இல்லை.ஆக்‌ஷன் ஒவர்டோஸ்!!! மைக்கேல் பே நம்ம ஊரு ஷங்கர் மாதிரி. ஒரு டேங்கர் லாரியைக் கூட வெடிக்க வைக்காம இந்த ஆளால படமே எடுக்க முடியாது. பேட் பாய்ஸ், ஆர்மகெட்டான், பியர்ல் ஹார்பர் என்று பிரம்மாண்டமா படம் எடுத்து தொலைச்சுட்டதனால நம்ம ஸ்பீல்பெர்க் இந்த ஆளை டைரக்டரா போட்டு ட்ரான்ஸ்ஃபார்மர் முதல் பாகத்தை தயாரிச்சாரு. செம வசூல். நிறைய காசு பார்க்குற நெனைப்புல இந்த படத்தையும் எடுத்து இருக்காங்க. நம்பிக்கை வீண் போகலை. முதல் நாள் மட்டும் இந்த படம் 60 மில்லியன் டாலர் வசூல் செஞ்சிருக்கு. மேலும் படம் ரீலிஸ் ஆகி இந்த 5 நாள்ல உலகம் முழுசும் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலருக்கு மேல வசூல் ஆகியிருக்கு. பைசா வசூல்.

கண்ணு வலிக்கிற அளவுக்கு க்ராஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. (த்யேட்டருக்கு போறப்ப கொஞ்சம் ஐ ட்ராப்ஸ் எடுத்துட்டு போங்க). அதனாலேயே இந்த படம் எனக்கு பிடிக்காம போச்சு. அப்புறம் படத்தோட நீளம்ம்ம்ம். 2 1/2 மணி நேரம். முடியலை. சுத்தமா விறுவிறுப்பே இல்லாத திரைக்கதை. ஒரு சில இடங்கள்ல சிரிப்பு வந்தாலும், சி.ஜி. ஆக்‌ஷன் காட்சிகள் வர்றப்ப கொட்டாவி விடுறதை கண்ட்ரோல் பண்ண முடியலை. எனக்கு தெரிஞ்சு ஒரு திரைப்படத்தின் நடுவில் நான் தூங்கியது, இந்த படத்தை பார்க்கும் போது தான். ஒளிப்பதிவு எல்லாம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை கணக்கா பண்ணியிருக்காங்கோ. அய்யா எடிட்டரு, எல்லாம் க்ராஃபிக்ஸ்ல பார்த்துப்பாய்ங்கன்னு எடிட்டிங் டேபிள்ல தூங்கிப் புட்டீகளோ.

படத்திற்கு பிண்ணனி இசை ‘லிங்கின் பார்க்’ (Linkin Park) . ஆமாங்க. இந்தியாவில நம்ம ஸ்பென்சர், சிட்டி செண்டரில் சுத்தும் இளசுகளின் ஃபேவரைட் ராக் பேண்ட் ‘லிங்கின் பார்க்கே’ தான். பேசாம அவங்க பாட்டுக்கு ஆல்பம் போடுறதோடு விட்டு இருக்கலாம். இந்த படம் இந்தியாவில வந்தா தயவு செய்து தமிழ்ல பார்க்காதீங்க. ஏன்னா, பாதி படத்தை டப்பிங் எடிட்டரும், செகண்ட் எடிட்டரும் (வேற யாரு.. த்யேட்டர் ஆப்பரேட்டர் தான்) வெட்டி தள்ளிருவாங்க. முதல் பாகத்துக்கு அப்படி தான் ஆச்சு. மொத்ததுல, ஒரு மைண்ட்லெஸ் ஆக்‌ஷன் படத்தை எதிர் பார்த்து போனாக் கூட டெம்பராத் தானுங்க வெளிய வருவீங்க. இருந்தாலும் தலைவிக்காக ஒருக்கப் பார்க்கலாம்.

Monday, June 1, 2009

கிளிண்ட் ஈஸ்ட்வுட் - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


நேத்தே இந்த பதிவைப் போட்டு இருக்கனும். ஏன்னா நேத்து (31/5/2009) தான் இவருக்கு பிறந்தநாள். நம்ம தமிழ் மக்களுக்கு தெரிந்த மட்டில் இவரு தான் ’குவிக் கன் முருகன்’. 79 வயசு முடிஞ்சும் இன்னும் படம் இயக்குறதை இவரு விடலை. ஒரு சாதாரண டி.வி நடிகரா வாழ்க்கையைத் தொடங்குன கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஒவர் நைட்ல பிரபலம் ஆனது அவரோட ‘ஃபிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ்’ படத்துனால. அதுக்கப்புறம் ‘For a Few Dollars More', மிக முக்கியமான படமான ‘ The Good, The Bad and The Ugly', எல்லாம் ஹாலிவுட்டோட புது சூப்பர் ஸ்டாரா மாத்திருச்சு. இந்த மூணு படமுமே செர்ஜியோ லியோனி இயக்கத்துல வெளி வந்தவை.


இந்த படங்களுக்கு அப்புறம் தொடர்ந்து அவர் நடித்த ‘Hang 'em High', 'Paint Your Wagon', 'Two Mules For Sister Sara', 'Joe Kidd' ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ஒரு கவ்பாய் ஆகவே முன்னிலைப் படுத்தின. இந்த இமேஜில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஈஸ்ட்வுட் தானே இயக்கி நடித்த படம் ‘Play Misty for Me'. ஒரு டிஸ்க் ஜாக்கியாக இந்த படத்தில் தோன்றுவார். இதை தொடர்ந்து ‘சான் பிரான்ஸிஸ்கோ’ நகர காவல் துறை அதிகாரியாக அவர் தோன்றிய ‘Dirty Harry', ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமும் பாரட்டுப் பெற்றது. இந்த படத்தில் அவர் தோன்றிய இன்ஸ்பெக்டர் 'Harry Callahan' கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து, ‘Magnum Force', 'The Enforcer', 'Sudden Impact', The Dead Pool' போன்ற படங்கள் வெளி வந்தன. இருப்பினும், முதல் படம் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பு இருந்தாலும் விமர்சகர்களிடம் பாராட்டு பெறவில்லை. 

திரை உலகில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு தொய்வு காலம் வரும் அல்லவா. அது கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கும் வந்தது.80களின் இறுதியில் வெளியான 'Pink Cadillac', 'The Rookie' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததோடு, விமர்சகளின் பாராட்டையும் பெறவில்லை. ஒரு படைப்பாளி வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது தான், ஒரு அருமையான படைப்பு அவனிடம் இருந்து வெளிவரும் என்று கூறுவார்கள். அதே போல் எல்லோருக்கும் பதில் சொல்வது அவர் இயக்கி, நடித்து வெளிவந்த படம் தான் ‘Unforgiven'. செர்ஜியோ லியோனியின் வெஸ்டர்ன்களுக்கு அடுத்து எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் நீங்காது இடம் பிடித்த படம் இந்த படம். மேலும் இந்த படம் இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று தந்தது.

இதற்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்திய ஈஸ்ட்வுட், 'A Perfect World', 'True Crime', 'Blood Work', 'Space Cowboys' ஆகிய படங்களை 90களின் இறுதியில் இயக்கினார். 'Mystic River', 'Million Dollar Baby' மூலம் திரும்பவும் ஆஸ்கர் பயணத்தைத் தொடர்ந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், ‘The Flags of our Fathers', 'Letters from Iwo Jima' போன்ற சிறப்பான திரைப்படங்களையும் இயக்கினார். 2008ஆம் ஆண்டும் இவருக்கு சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது. ‘Changeling', 'Gran Torino' ஆகிய இரு அழகான திரைக்காவியங்கள் இவர் இயக்கத்தில் வெளி வந்தன. 

இதில் இவர் நடித்த ‘Gran Torino'வை தமிழ் சினிமாவின் ஒவ்வொரு இயக்குனரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த படத்தைப் பற்றியே ஒரு நீண்ட பதிவு போடலாம். ஏன் கிளிண்ட் ஈஸ்ட்வுடின் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் தனித்தனியாக பதிவு போடலாம். இந்த வயதிலும் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'The Bourne Ultimatum' புகழ் மேட் டேமனைக் கொண்டு ‘The Human Factor' என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். மார்க்கண்டேயனாகத் திகழும் கிளிண்ட் ஈஸ்ட்வுடிற்கு, இந்த வருடமும் சிறப்பாக அமையுமாறு வாழ்த்துவோம்.

Saturday, May 30, 2009

Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 1


’ஃபோர்பஸ்’ வார இதழ், 2009ஆம் ஆண்டின் 1000 கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒரு புதிய வரவு. இவர்(ன்!!?? - சரி. இவர்னே போடுவோம், எதுக்கு வம்பு) தலைக்கு அமெரிக்க அரசு நிர்னயித்துள்ள தொகை, 5 மில்லியன் டாலர்கள். பத்தாதுக்கு ‘டைம்’ வார இதழ் 2009இன் ஆண்டின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் 6-வது இடம் கொடுத்துள்ள்து. ’எல் சேப்போ’ என்று அழைக்கப்படும் 52 வயதாகும் ’ஜோகுவின் கஸ்மேன்’, பாப்லோ எஸ்கோபாரைக் காட்டிலும் அமெரிக்காவிற்கு பெரிய திருகுவலி. காரணம் இவனால் கடந்த ஆண்டு மெக்ஸிகோ, அமெரிக்க எல்லையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்கள் அத்தனை பேரும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். 100, 200 கிலோ என்று இவன் கடத்துவதில்லை. 1993ஆம் ஆண்டு அரிசோனாவில் இவனால் கடத்தப் பட்ட போது பிடிபட்ட கொகைனின் அளவு 7.3 டன்.


1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது ’மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ’விடம். ’தி காட்ஃபாதர்’ என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனாகத் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் ‘சினலோவா கார்டல்’ (Sinaloa Cartel).

கஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர். 

1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான ’டிஜூவானா கார்டல்’ சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் ‘ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ’. 

1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...

Sunday, May 24, 2009

'சர்வம்' - பட்டையைக் கிளப்பும் இளையராஜாவின் பிண்ணனி இசை

பழச தூசி தட்டி உபயோகிப்பதில் தான் கோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். முதலில் ரீமிக்ஸ் என்று ஆரம்பித்தார்கள். அப்புறம் பழைய பாட்டை அப்பிடியே உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் வரும் 'சிறு பொன்மணி அசையும்' பாடலை கவித்துவமாக காட்சிகளுக்கு நடுவே புகுத்தியிருந்தார் சசிகுமார். அதே போல் சமீபத்தில் வெளியான 'பசங்க' திரைப்படத்தில் கூட ரிங்டோனாக வரும் 'மேஸ்ட்ரோ'வின் பாடல்.


இப்போது 'சர்வம்'. ஆனா சும்மா சொல்ல கூடாது. அப்பவே இன்னாமா கம்போஸ் பண்ணியிருக்காருப்பா ராஜா. ஆர்யா, த்ரிஷாவை பார்குரப்ப எல்லாம் வயலின் ஹை பிட்சில அதிருது. அது இன்னா பாட்டுன்னு ரெம்ப நேரம் மண்டையை பிச்சப்புறம் தான் தெரிஞ்சது. 'வாழ்க்கை' படத்துல நம்ம அக்கா 'சில்க்' ஆடுன 'மெல்ல மெல்ல என்னை தொட்டு' பாட்டு. அது என்னமோ படத்தோட முதல் பாதி முழுசும் இந்த பாட்டோட பி.ஜி.எம் தான் ஒடுது.

அந்த பாட்டை இங்க பாருங்க:


என்னது படத்துக்கு மீசிக் 'யுவன் ஷங்கர் ராஜாவா'!! சொல்லவே இல்லை...

Wednesday, April 22, 2009

ஸ்பகெட்டி வெஸ்டர்ன்களும், மீட்பால் தழுவல்களும்


புழுதியோடு சேர்ந்து பறக்கும் காற்று, வெறிச்சோடிய வீதிகள், காற்று எழுப்பும் வினோதமான ஓசை, முன்னங்கால் தெறிக்க ஓடும் குதிரைகள், தொழில் புரட்சியின் குழந்தைகளான ரிவால்வர்கள், நீராவிப் புகையை எழுப்பி வரும் இரயில் வண்டிகள், எப்போதும் சண்டைகள் நிரம்பி வழியும் மதுக் கடைகள், நீண்ட தோல் அங்கிகளுடன் வலம் வரும் கெளபாய்கள், இவைகள் இல்லாத ஒரு வெஸ்டர்ன் சாத்தியப்படுமா??!!
அது என்னமோ தெரியவில்லை. கெளபாய் என்றாலே என் நினைவுக்கு வருவதுகிளிண்ட் ஈஸ்ட்வுட்தான். அவருக்கு முன்னாலே ஹென்றி போன்டா, ஜான் வெய்ன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், கெளபாய் என்ற பதம் தமிழ்நாட்டில் அறிமுகமானது ’கிளிண்ட் ஈஸ்ட்வுடி’னால் தான். யார் இந்த கெளபாய்கள் என்று தெரிந்து கொள்ள சிறு வயதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது உண்டு. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள டி.என்.டி, ஸ்டார் மூவிஸில் போடப்பட்ட அனைத்து படங்களையும் பார்க்க ஆரம்பித்தேன் (அப்போது டி.வி.டி எல்லாம் கிடையாது. இருந்தாலும் தேனி மாநகரத்தில் ரெம்ப கஷ்டமுங்கோ).

என்னை மிகவும் பாதித்த படம் ‘Unforgiven'. ஆனால் இப்போதைய தலைப்பு இந்த படத்தைப் பற்றி அல்ல. ’செர்ஜியோ லியொனி’ என்ற ஆங்கிலமே தெரியாத இத்தாலிய மேதை எடுத்த ‘ஸ்பகெட்டி வெஸ்டர்ன்’ (Sphagetti Western) படங்களைப் பற்றி. இந்த வெஸ்டர்ன் திரைப்படங்கள் பெரும்பாலும் இத்தாலியில் எடுக்கப்பட்டதால், அமெரிக்கர்கள் இத்தாலிய உணவான ஸ்பகெட்டியோடு இணைத்து அழைக்க ஆரம்பித்தனர். 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ லியொனி இணையில் வந்த முதல் படம் ‘Fistful of Dollars'. மிக நீளமான காட்சியமைப்புகள், டெக்னிகலர் மற்றும் சினிமாஸ்கோப் உதவியுடன் அமைக்கப்பட்ட மிகவும் அருகில் எடுக்கப்பட்ட க்ளோஸ் - அப் காட்சிகள், வெஸ்டர்ன் திரைப்படங்களை மறு வாசிப்பு செய்ய வைத்தன. குற்றங்கள் அதிகம் நிகழும் ஒரு நகரத்திற்கு வரும் பெயர் தெரியாத கெளபாய் ஒருவன், அங்கு இருக்கும் இரு வன்முறை கும்பல்களை உருத்தெரியாமல் ஆக்கி அந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி தருவதே கதை. மிகச் சாதாரண கதையாக இருப்பினும் கதை சொல்லப்பட்ட விதம், காட்சியமைப்புகள், இசை (என்னியோ மேரிகோனி) போன்றவை படத்தை மட்டுமல்லாது வெஸ்டர்ன் திரைப்படங்களின் தரத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றன. 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ இணையில் அடுத்தடுத்து, 'For a Few Dollars More', மற்றும் ஆகச் சிறந்த படமான ‘The good, The bad and The Ugly' போன்ற படங்கள் அதே பெயர் தெரியாத கெளபாயை முன்னிலைப் படுத்தி வெளி வந்தன. எனக்கு  மிகவும் பிடித்த வெஸ்டர்ன் படங்களாக இவை இருந்தன, ‘யோஜிம்போ’வைப் பார்க்கும் வரை. 

அகிரா குரோசேவா, தொஷிரோ மிஃபுனே இணையில் வெளிவந்த படம் தான் ‘யோஜிம்போ’. 'ரோஷோமான்’, ‘செவன் சமுராய்’ படங்களால் உலக பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்த இருவரும் அளித்த உலகின் மிகச் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம் தான் ‘யோஜிம்போ’. படத்தின் கதை??!! அப்படியே ‘Fistful of Dollars'. என்ன இங்கே ‘சமுராய்’ என்றால் அங்கே ‘கெளபாய்’. ‘யோஜிம்போ’வை தழுவி எடுத்த  செர்ஜியோ லியோனி, அகிரா குரோசேவா’வுக்கு நன்றி செலுத்தும் வகையில் படத்தின் டைட்டிலில் கூட அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஸ்பகட்டியோடு இணைந்த மீட்பால் (Meat Ball) போல அப்பட்டமாகத் தழுவி எடுத்து விட்டார் செர்ஜியோ. பல வருடங்களுக்குப் பின் செர்ஜியோ ஒரு பேட்டியில், அகிரா குரோசேவாவிடம் மன்னிப்புக் கேட்டதாக தகவல். 

இருப்பினும், செர்ஜியோ லியோனியின் ‘Once Upon a Time in West' திரைப்படத்தை மறக்க முடியுமா. அதிலும் அந்த படத்தின் பொறுமையை சோதிக்கும் அந்த நீளமான ஆரம்ப காட்சியை பல தடவை பார்த்து டி.வி.டியில் கீறல் விழுந்து விட்டது. சிறு நெருடல்கள் இருப்பினும், வெஸ்டர்ன் திரையுலகின் இறவாத மேதை செர்ஜியோ லியோனி என்பதில் ஐயமில்லை.

Saturday, April 11, 2009

இரா. முருகனும் 'உன்னைப்போல் ஒருவனும்'

ஹிந்தியில் வெளியாகி பரபரப்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற 'எ வெநஸ்டே' திரைப்படத்தை தமிழில் கமல் மறு ஆக்கம் செய்வதாக கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு ஒரு நல்ல திரை எழுத்தாளர் தேவை. இல்லையென்றால் சொதப்பல் தான் என்று எண்ணி கொண்டு இருந்த போது தான், இரா. முருகன் இந்த படத்திற்கு எழுத்தாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சுஜாதாவுக்கு அடுத்து தமிழில் சயின்ஸ் பிக்சன் எழுத யாரும் இல்லையா என்று கேட்டால் தயங்காமல் இரா.முருகனை சுட்டிக் காட்டுவேன். அவரின் 'சில்லு' கதையை படித்த பின் யாருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உதறல் எடுக்காமல் இருக்காது. 1996 இந்தியா டுடே 'இலக்கிய மலரில்' வெளியான அவரின் 'சிலிகான்' (சிறுகதையின் தலைப்பு சரியா என்று தெரியவில்லை) என்னுடைய கணிப்பொறி வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசையை மறு யோசனை செய்ய வைத்தது. இன்றைய மென்பொருள் நண்பர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைப் பற்றி அன்றே இந்த சிறுகதையில் எழுதி விட்டார் இரா.முருகன் .

எனக்கு மிகவும் பிடித்த கதை அவரின், 'இரண்டாம் ஆட்டம்' சிறுகதை தொகுப்பில் வெளி வந்த 'சேது'. இராமேஸ்வரத்தில் வாளிகளை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தங்களாக சுற்றி காட்டுவதற்கு நிறைய கைடுகள் இருப்பார்கள். அப்படி ஒரு கைடிடம் வரும் பெரியவர் ஒருவர், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக அனைத்து தீர்த்தங்களுக்கும் அழைத்து செல்ல சொல்லுவர். அப்படி சுற்றி காடும் கைடிடம் தன் வாழ்க்கையில் செய்த ஒரு மிகப் பெரும் பாவத்தைப் பற்றி விவரமாக சொல்லுவர் அந்த பெரியவர். முடிவில் தான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் தற்கொலை தான் என்று கடலில் குதித்து விடுவார். அதை அந்த கைடும் தடுக்க மாட்டார். கதையின் முடிவில் வரும் இறுதி வரி அந்த கைடு, ஏன் அந்த தற்கொலையைத் தடுக்க வில்லை என்ற புதிர் முடிச்சை அவிழ்க்கும். ஆனால் அந்த முடிச்சு எனக்கு பொட்டில் அடித்து போல ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. புத்தகத்தை மூடி வைத்து ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாது சலனமற்று உக்கார்ந்து இருந்தேன்.

இன்னொரு மிகவும் பிடித்த கதை 1997 தினமணி பொங்கல் மலரில் வெளி வந்த 'பூச்சி'. நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம். பல சமயங்களில் அந்த அடையாளங்கள் அவர்களுக்கு பட்ட பெயராக வாய்க்கும். சிலருக்கு நல்லதாக வாய்க்கும், பலருக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும் விதம் வாய்க்கும். அப்படி ஒருவன் தான் 'பூச்சி'. 'ஆழ்வார்', 'சைக்கிள் முனி' போன்றவை அவரின் ஆகச் சிறந்த சிறுகதைகள்.


'அரசூர் வம்சமும்' ,'நெ.40 இரட்டை தெருவும்' படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுஜாதாவை என் அப்பா கேட்க நினைத்த கேள்வி தான், இரா. முருகனுக்கும், "எப்பிடி சார், உங்க வேலைப் பளுவுக்கும் நடுவுலயும் எழுதுறீங்க?".

இவரைப் பத்தி மேல தெரிஞ்சுக்கனும்னா இங்க போங்க:
http://www.eramurukan.in/tamil/home

Wednesday, April 8, 2009

தனக்கு தானே ஆப்பு வைப்பது எப்படி - விளக்குகிறார் கேப்டன்!!

ஷப்பா!! தேர்தல் வந்தாலும் வந்தது, நம்ம மொக்கை மாயாண்டி மாமாவை விட நம்மாளுங்க அறிக்கைன்ற பேர்ல கெட்ட மொக்கைய போடுறாங்க. 'சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' - அந்த கதையா நம்ம கேப்டன் தனக்கு பப்ளிசிட்டி வர்றதுக்காக எதையோ சொல்ல, அது அவருக்கே ஆப்பு ஆகி போச்சு.


'எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ.

ஆனாலும் கேப்டன் உண்மையிலே பாவமுங்க. பின்னே ஒரு மனுஷனுக்கு மாத்தி, மாத்தி பல ரூபங்கள்ல ரிவீட் வந்தா என்ன தான் பண்ண முடியும். இதெல்லாம் பத்தாதுன்னு அவரு கட்சிகாரர் ஒருத்தருக்கு இன்னொரு பிரச்சனை.
அது யாருன்னு பார்த்தா நம்ம மா பா பாண்டியராஜன். இந்தியாவில் மிகப் பெரும் வேலைவாய்ப்பு நிறுவனமான மா பா'வை நிறுவியவர். அது மட்டுமல்ல, நல்ல இலக்கிய ஆர்வலர். பல சேவை நிறுவங்கள் நடத்தி வருகிறார். அந்த சேவை நிறுவனகள் மூலம் ஆரம்பித்தது தான் சிக்கலே.



அவருடைய சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் சில உதவிகள் செய்யப் போக, அது தேர்தல் கமிஷன் காதுக்கும் , மூக்குக்கும் எட்ட அவருக்கு அதுவே ஆப்பாகி இருக்கிறது. தேர்தல்னு வந்தா எல்லாரும் 'உண்மையான' அரசியல்வாதி ஆயிடராங்கப்பு. ஜெ. கே. ரித்தீஷுக்கு எல்லாம் பாண்டியராஜன் நூறு மடங்கு தேவலாம். இது மாதிரி சீப்பான பப்ளிசிட்டி பண்ணாம, கொஞ்சம் நேக்கா கேப்டனும் அவரோட கட்சிக்காரங்களும் வேலை பார்த்தாங்கனா நடுநிலையாளர்கள் ஒட்டு அத்தனியும் அவருக்குதேன்.

இந்த தேர்தலில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் எனக்கு பிடித்த வேட்பாளர் மா பா பாண்டியராஜன் தான். பார்க்கலாம் வை. கோ வை ஜெயிக்கிறாரா இல்லையானு??!! கேப்டனோட படம் சும்மா நக்கலுக்கு தானுங்கோ. கேப்டன் ஆர்வலர்கள் காண்டு ஆகாதீங்கோ.

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Sunday, April 5, 2009

ஜெ. கே. ரித்தீஷ் - சும்மா வருமா சுனாமி

என்னத்த சொல்வேனுங்கோ? ஆனந்தம், ஆச்சர்யம், ஆனால் இதெல்லாம் மெய்யாலுமே நடக்குதுங்களா? தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரிலிசை, 'அயன்' பட ரிலிசை வுட ஆவலா எதிர்பார்த்து இருந்தேனுங்கன்னா. பாத்தா இன்ப அதிர்ச்சிக்கு மேல இன்ப அதிர்ச்சிங்கன்னா. நம்ம 'நாயகன்', வருங்கால 'தளபதி', பாலைவனத்தில் ஏங்கி கிடந்த எங்களுக்கு கிட்டிய 'கானல் நீர்' ஜெ.கே. ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியில நிக்க போறாருங்கோ.


நம்ம மொக்கை மாயாண்டி மாமாவுக்கு ஒரு நிமஷம் மூச்சு பேச்சு இல்லீங்கோ. "மாப்பிள்ளை, நீ நெஜமாத்தான் சொல்றியானு" 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி பத்து வாட்டி கேட்டு கான்பிர்ம் பண்ணாரு. நானும் மாயாண்டி மாமாவும் என்னைக்கு 'மினி சாந்தி' தியேட்டர்ல 'கானல் நீர்' பார்த்தோமோ, அன்னைக்கே தலைவர் ஜெ. கே. ரிதீஷோட ரத்தத்தின் ரத்தமான 'உடன்பிறப்புகள்' ஆகிட்டோம்.

நான் அந்த நியூச படிச்சதும் அப்பிடிக்கா இமாஜிநேசனுக்கு போயிட்டேன். அண்ணன் எம்.பி ஆகிட்டா பாராளுமன்றத்துல அவரோட 'கன்னிப் பேச்சு' (எவண்டா அவன் 'பன்னிப் பேச்சுனு' சொல்றது... த்தா உதைப்பட்டு சாகப்போற) எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். என்னால முடியலீங்கன்னா. சபாநாயகருக்கு பிரைன் பிரீஸ் வராம இருந்த சரிதான்.

ஆனா சார் ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. தி.மு.க கூட்டணிக்கு அவங்களோட சின்னம் மாதிரியே ரெம்ப ஒளிமயமான எதிர்காலம் இருக்குதுங்கோவ். தலைப்புக்கு எழுதுனதுக்கும் சம்பந்தமே இல்லையேன்னு தயவு செய்து கேக்காதீங்க.

அண்ணனோட நாயகன் படத்துல இருந்து ஒரு தத்துவார்த்துமுள்ள பாட்டை கேட்டு குஜால்டியா இருங்க.

ஹலோ பாஸ் எங்க அதுக்குள்ள அப்பீட் ஆகுறீங்க. அண்ணன் ஜெ.கே. ரிதிஷ நாலு வார்த்த புகழ்ந்து பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

Friday, April 3, 2009

போடுங்கம்மா ஓட்டு - ஏதாவது ஒரு சின்னத்தை பார்த்து...

மொக்கை மாயாண்டி மாமாவும் நானும் உக்காந்து எங்க ஊரு டீகடையில ( வேற என்ன McDonalds தானுங்கோ) உக்காந்து கொரிச்சுகினு இருந்தோம். "மாப்பிளை தேர்தல் வருது, நீ ஊருக்கு போகலையான்னு" கேட்டாரு. நானோ "அட நீங்க வேற மாமா, அவன் அவன் இந்த ரிசெஷன் டையத்துல வேலை கிடைக்க மாட்டேங்குது'னு புலம்பிகிட்டு கெடக்கான். இதுல எங்கிட்டு ஊருக்கு போறது"னு நான் என் பாட்டை பாடுனேன்.

உடனே மாமா டென்ஷன் ஆகிட்டாரு. "அது எப்பிடி மாப்பிளை. ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஓட்டு உரிமையை விட்டு கொடுக்க முடியுமா?". எனக்கோ கெட்ட காண்டு. "யோவ்!! நீ இந்த சம்மர் ஊருக்கு போறதுனால என்ன வாருறியா. நான் ஓட்டு போடறதுக்காக இங்க இருந்து இந்தியா போகனுமா. தப்பு லேது மாமு"னு என் பங்குக்கு நானும் டென்ஷன் ஆனேன்.

மாமா சொன்னதை யோசிச்சு பார்த்தா அவரு சொல்லுறது ஒரு வகையில நியாயம் தான்னு தோனுதுங்கோ. ஆனா என்ன பண்றது, திரை கடல் ஓடியும் திரவியம் தேடுனு எங்க ஆயா சொன்னத தட்டாம இங்க ஓடியாந்துட்டேன்.

நம்ம ஊருல தேர்தல் சூடு பிடிச்சிருச்சு போல இருக்குங்கண்ணா. தி.மு.க இன்னைக்கு நாளைக்கோ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்னு சொல்றாங்கோ. கேப்டனை பார்த்து ரெம்ப நாளாச்சு, 'மரியாதை'ல பார்க்கலாம்னு எதிர்பார்த்தா, படத்தை இப்போதைக்கு தடை பண்ணிட்டாங்களாம். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

நான் ஊருல இருந்த பொது திருமங்கலம் இடை தேர்தல் நடந்துச்சு. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. அசால்டா நூறு கோடி பணத்தை (உங்க பணமும், என் பணமும் தான்) போட்டு தி.மு.கவும், அ.தி.மு.கவும் சூதாடுனாங்க. திருமங்கலத்துல நான் இருந்திருக்க கூடாதான்னு கூட யோசிச்சேன். பின்ன என்னங்க, ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம் ரூவா குடுத்த வேணாம்னு சொல்லுவீங்களா. நீங்க வேணாம்னு தான் சொல்லி பாருங்களேன்.

போன பாராளுமன்ற தேர்தல்ல ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டேன். பாவம் அந்த வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கலீங்கோ. இருந்தாலும் ஓட்டுரிமையை விட்டு குடுக்க கூடாதுன்னு போட்டுட்டு வந்தேன். அதே மாதிரி கலைஞர் பண்ற குடும்ப அரசியல் பிடிக்கலைனோ, அம்மா பண்ற 'ராமர் பால' பாலிடிக்ஸ் பிடிக்கலைனோ, கேப்டனோட படம் வரலைனோ, தைலாபுரம் தோட்டத்துகாரங்க தெனமும் வுட்ற அறிக்கை புடிக்கலைனோ, இதர விஷயங்கள் பிடிக்கலைனோ ஓட்டு போடாம இருந்துராதீங்கோ.

யாரையுமே பிடிக்கலையா கொறஞ்ச பட்சம் 'ஒ' சின்னத்துல ஓட்டு போடுங்க. அதாங்க 49 ஒ அதை நிரப்பி குடுங்கோ. இல்லேன்னா உங்க ஓட்டு உறுதியா கள்ள ஓட்டு தேன். ஹ்ம்ம்... என் ஓட்டை எவன் போடப் போறானோ??!!!

ஒரு டைமிங் வீடியோ...

குரங்கணி - இது எங்க ஏரியா ஊட்டி


அது என்னமோ தெரியலீங்க. அப்பா கூட ஊர் சுத்தறது'னா அப்பிடி ஒரு குஷி. அதுவும் அப்பாவோட சுசுகி மாக்ஸ் 100 பைக்'ல அப்பா ஓட்ட, நான் பின்னாடி உக்காந்து போறது தனி சந்தோசம் (இப்ப அத வித்தாச்சு :( ). இந்தியா போயிருந்தப்போ அம்மா நச்சரிப்பு தாங்காம குல தெய்வம் கோவிலுக்கு நானும் அப்பாவும் கெளம்புனோம். அப்பிடி போயிட்டு திரும்பி வரப்ப "குரங்கணி போகலாமானு" அப்பா கேட்டாரு.

நான் மாட்டேனு சொல்லுவேனா. வுடு ஜூட். போடிநாயக்கனூர்'ல (தேனி மாவாட்டம்) இருந்து 15 கல்லு தொலைவுல இருக்குதுங்க நம்ம குரங்கணி. போடியில இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல 'முந்தல்'னு ஒரு கிராமம் இருக்கு. அங்க ரெண்டு ரோடு பிரியும். பீச்சாங்கை பக்கமா போனீங்கன்னா 'மூனாறு'. சோத்துக்கை பக்கமா போனா நம்ம 'குரங்கணி'.நீங்க ஊட்டி, கொடைக்கானல்' ஒரு வாரம் சுத்தி பார்குறதும் ஒரு மத்யான நேரம் இங்க பைக்'ஐ எடுத்துட்டு சுத்துறதும் ஒண்ணுனு சொல்லுவேன். அப்பிடி ஒரு அருமையான இடமுங்கோ.



இந்த ஊருல இருக்குற ஸ்கூல்'ல தான் எங்க தாத்தா வாத்தியாரா வேலை பார்த்து இருக்கார். ச்பைசெஸ் டூரிசம் போர்டு கண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த இடம் தெரிஞ்சதுனால ரோடு பக்காவா போட்டு இருக்காங்கோ. பசங்களோட காம்பிங் போறதுக்கு சரியான இடமும் கூட.


போடியில இருந்து குரங்கணி போற ரோடு தான் மெயின் அட்ராக்ஷன். அங்க அங்க பைக்'ஐ நிறுத்தி போட்டோ எடுத்துக்கோங்கோ. குரங்கணி'ல வண்டிய நிறுத்திட்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடந்தீங்கன்னா, டாப் ஸ்டேஷன்'நு ஒரு எடம் வருமுங்கோ. ஐம்பதுகள்'ல இந்த இடத்தில இருந்து மூனாருக்கு (கேரளா) கேபிள் கார் வசதி இருந்தது. அது மூலமா குரங்கணி சுத்தி உள்ள ஊர்கள்ல வளர்ற ஏலக்காய்'ய அனுப்பிகிட்டு இருந்தாங்க.


அதுக்கு அப்புறம் அது அவ்வளவா லாபகரமா இல்லாததுனால விவசாயிங்க அதை என்னமோ அவ்வளவா உபயோகிக்கல. குரங்கநியில இருந்து ஒரு ரெண்டு கல்லு டாப் ஸ்டேஷனுக்கு பைக்'ல போகலாம். அதுக்கு மேல நடந்து தான் போகணும். மேல ஏறுறதுக்கு முன்னாடி சில பல வடைகள், டீயை உள்ள தள்ளிக்கிட்டு போங்க, இல்லாட்டி பசியில நுரை தள்ளிகிட்டு தான் கீழ இறங்குவீங்க. (அங்க இருக்குற ஒரு கடையில சூடா 'கொழுக்கு மலை' டீ போடுவாங்க).

பெரும்பாலும் மூனார் போயிட்டு வரவங்க வர வழியில இங்க வந்துட்டு போறாங்க. ரெம்பவே சிம்பிள்'ஆன பிக்னிக் ஸ்பாட். ஆனா தங்குற வசதி எல்லாம் கெடயாது. சாப்பாடு சாப்பிடனும்'னா போடிக்கு தான் வரணும். மத்தபடி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பைக் அல்லது கார்'ல ஒரு சவாரி போக பக்காவான இடமுங்கோ.
'
அப்புறம் ஒரு முக்கியமான விஷயமுங்கோ. நீங்க பார்க்குற அம்புட்டு போட்டோவையும் எடுத்தது நாந்தேன்.

Share